லண்டன் திரும்பும் இளவரசர் ஹரி: பிறந்த நாட்டில் உருவான புதிய சிக்கல்
இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டியின் பத்தாண்டு நிறைவைக் கொண்டாட இளவரசர் ஹரி அடுத்த மாதம் லண்டன் திரும்பும் நிலையில், புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.
அரச குடும்பத்து மாளிகையில்
லண்டனில் இளவரசர் ஹரிக்கு என சொந்தமாக குடியிருப்புகள் எதுவும் தற்போது இல்லாத நிலையில், அவர் அரச குடும்பத்து மாளிகையில் தங்குவாரா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.
2020ல் தமது மனைவி மேகன் மெர்க்கலுடன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறினார் இளவரசர் ஹரி. தற்போது தமது குடும்பத்துடன் கலிபோர்னியாவில் குடியிருந்து வருகிறார்.
சார்லஸ் மன்னர் தமது புற்றுநோய் பாதிப்பு தொடர்பில் தகவல் தெரிவித்ததை அடுத்து, லண்டன் திரும்பிய ஹரி, அவருக்கு ஒதுக்கப்பட்ட 30 நிமிடங்களில் தமது தந்தையை சந்தித்துவிட்டு அமெரிக்கா திரும்பினார்.
இந்த நிலையில் தற்போது இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டியின் பத்தாண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டு இளவரசர் ஹரி அடுத்த மாதம் லண்டன் திரும்பவிருக்கிறார்.
8ம் திகதி புதன்கிழமை செயின்ட் பால்ஸ் கதீட்ரலில் முன்னெடுக்கப்படும் ஆராதனையில் கலந்து கொள்வார். பிப்ரவரி மாதம் தமது தந்தையை சந்தித்துவிட்டு திரும்பிய பின்னர் தற்போது இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஹரி லண்டன் திரும்புகிறார்.
சுமார் 25 மணி நேரம் விமான பயணம் மேற்கொண்டு, வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே மன்னர் சார்லஸை சந்திக்கும் பொருட்டு இளவரசர் ஹரிக்கு நேரம் ஒதுக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்திருந்தது.
அதுவும் 15 மாதங்களுக்கு பின்னர் மன்னர் சார்லஸ் மற்றும் ஹரி மேற்கொண்ட தனிப்பட்ட சந்திப்பு என்றும் கூறப்படுகிறது. லண்டனில் அரச குடும்பத்திற்கு சொந்தமான சொகுசு மாளிகைகள் பல இருந்தும் இளவரசர் ஹரி ஹொட்டல் ஒன்றில் தான் தங்கியுள்ளார்.
பிறந்த நாட்டிலேயே இளவரசர் ஹரிக்கு
கடந்த செப்டம்பர் மாதம் லண்டன் திரும்பிய போதும் இளவரசர் ஹரி ஹொட்டலில் தான் தங்கியுள்ளார். தற்போது மீண்டும் லண்டன் திரும்பும் ஹரி இந்தமுறையும் ஹொட்டலில் தங்குவார் என்றே நம்பப்படுகிறது.
ஆனால் அவர் தங்கவிருக்கும் ஹொட்டல் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஒரு இரவுக்கு 8,000 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கும் Goring ஹொட்டலில் ஹரி தங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஃபிராக்மோர் மாளிகையில் இருந்து சார்லஸ் மன்னரால் வெளியேற்றப்பட்டதில் இருந்து, பிறந்த நாட்டிலேயே இளவரசர் ஹரிக்கு தங்கிச் செல்ல குடியிருப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி, கடந்த ஆண்டு ஹரி லண்டன் திரும்பிய போது ஃபிராக்மோர் மாளிகையில் தங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இருப்பினும் பக்கிங்ஹாம் அரண்மனை, கிளாரன்ஸ் மாளிகை, கென்சிங்டன் அரண்மனை மற்றும் விண்ட்சர் மாளிகையில் அறைகள் இருப்பதாகவும் ஹரி விரும்பினால் தங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பின்னர், ஃபிராக்மோர் மாளிகையில் தங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் ஹரி அரச குடும்பத்து மாலிகைகளில் தங்குவதை தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |