கடைசி நம்பிக்கையும் போனது? இளவரசர் ஹரி தொடர்பில் வெளியாகியுள்ள ஏமாற்றமளிக்கும் செய்தி
பிரித்தானிய இளவரசர் ஹரி தொடர்பில் வெளியாகியுள்ள ஒரு செய்தி, ராஜ குடும்ப ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
இருந்த ஒரே நம்பிக்கை
பிரித்தானிய ராஜ குடும்பம் இளவரசர் ஹரியின் மனைவி மேகனால் பெரும் அவமானத்தையும் மன வேதனையையும் அனுபவித்த நிலையில், மன்னர் சார்லசுக்கும் இளவரசி கேட்டுக்கும் புற்றுநோய் என தகவல் வெளியானதையடுத்து, அதைக் காரணமாக வைத்தாவது ராஜ குடும்பம் மீண்டும் ஒன்றுபடுமா, இளவரசர் ஹரி தன் குடும்பத்துடன் இணைவாரா என அவரது ரசிகர்களும், ராஜ குடும்ப நலம் விரும்பிகளும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
வெளியாகியுள்ள ஏமாற்றமளிக்கும் செய்தி
ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தி அவர்களுக்கு ஏமாற்றத்தையளிப்பதாக அமைந்துள்ளது. ஆம், அடுத்த மாதம், அதாவது, மே மாதம் 8ஆம் திகதி, போரில் காயமடைந்த மற்றும் உறுப்புகளை இழந்த ராணுவ வீரர்களுக்காக, ஹரி துவங்கிய இன்விக்டஸ் விளையாட்டுப்போட்டிகளின் பத்தாம் ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், லண்டனிலுள்ள புனித பால் தேவாலயத்தில் ஹரி உரையாற்ற இருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது.
அப்படி ஹரி பிரித்தானியாவுக்கு வரும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தன் தந்தையையும், தன் அண்ணியான இளவரசி கேட்டையும் சந்திக்கக்கூடும். அது அவர்கள் மீண்டும் இணைவதற்கு ஒரு வாய்ப்பாக அமையக்கூடும் என பலரும் காத்திருக்கிறார்கள்.
ஆனால், என்ன காரணமோ, ஹரி அடுத்த மாதம் இன்விக்டஸ் போட்டிகள் தொடர்பிலான நிகழ்ச்சிக்காக பிரித்தானியா வரமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் நேரடியாக வருவதற்கு பதிலாக, காணொளி வாயிலான அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக ஹரி பிரித்தானியாவுக்கு வருவதை ரத்து செய்யக்கூடும் என கூறப்படும் நிலையில், அவர் பிரித்தானியா வருவதை ரத்து செய்ய திட்டமிட உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
அப்படி ஹரி பிரித்தானியா வரவில்லையானால், அவர் தன் குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு இனி எப்போது அமையும் என்று கூறமுடியாது. ஆக, மன்னர் சார்லசுக்கும் இளவரசி கேட்டுக்கும் புற்றுநோய் என தகவல் வெளியானதையடுத்து, அதைக் காரணமாக வைத்தாவது ராஜ குடும்பம் மீண்டும் ஒன்றுபடுமா, ஹரி தன் குடும்பத்துடன் இணைவாரா என பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கும், ராஜ குடும்ப நலம் விரும்பிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சலாம் என தோன்றுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |