ஓபரா பேட்டியை நினைத்து இளவரசர் ஹரி வருத்தமும் சங்கடமும் அடைந்துள்ளார்: ராஜ குடும்ப நிபுணர்
இளவரசர் ஹரி, ஓபராவுக்கு தான் அளித்த பேட்டியை எண்ணி வருந்துவதாகவும், தர்மசங்கடமாக உணர்வதாகவும், ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டென கோபம் கொள்ளும் குணம் உடையவர் ஹரி என்று கூறும் ராஜ குடும்ப நிபுணரான Duncan Larcombe, ஏற்கனவே இதுபோல் பல முறை நடந்துள்ளது என்கிறார்.
ஒரு முறை ஹரி, வில்லியம் மற்றும் Duncan ஆகியோர் இணைந்து மதுபானம் அருந்துவதற்காக கூடியபோது, ஒரு குறிப்பிட்ட விடயத்திற்காக ஹரி சட்டென கோபம் கொண்டதாகவும், ஆனால், வில்லியம் நடந்ததை விளக்கியதும் உடனே கோபத்தை விட்டு மன்னிப்புக் கோரியதாகவும், அதன்பின் மூவரும் ஒன்றாக மதுபானம் அருந்தியதாகவும் தெரிவிக்கிறார் Duncan.
அதுதான் ஓபரா பேட்டியின்போதும் வெளிப்பட்டது என்று கூறும் Duncan, ராஜ குடும்பத்தில் மேகன் எதிர்கொண்ட விடயங்கள் ஹரியை காயப்படுத்தியதுடன் கோபமடையவும் வைத்தன என்றும், அதனால் பேட்டியில் பல விடயங்களை பேசி விட்டு, பிறகு வீடு திரும்பியதும் வழக்கம்போல ஹரி வருந்தியிருப்பார் என்று கூறுகிறார் Duncan.
இதற்கிடையில், மேகன் தனது அமெரிக்க கனவு வாழ்வை வாழ்ந்து வருகிறார் என்றும், இந்த இரண்டு உலகங்களுக்கும் இடையில் ஒத்துப்போக ஹரி தடுமாறி வருகிறார் என்றும் கூறுகிறார் Duncan.
மிகவூம் கடினமான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் ஹரி என்று கூறும் Duncan, இன்னும் கடினமான காலங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறுகிறார்.
இதற்கிடையில் ஜூலை மாதம் 1ஆம் திகதி, டயானாவின் சிலை திறப்பு விழாவுக்காக ஹரி பிரித்தானியாவுக்கு வரவேண்டியுள்ளது, ஏற்கனவே பிரித்தானியா வந்தபோதே ராஜ குடும்ப உறுப்பினர்கள் சிலர் அவரை கண்டுகொள்ளவில்லை.
ஆகவே, தனது இரண்டாவது குழந்தையின் பிறப்பைக் காரணம் காட்டி, ஒருவேளை ஹரி பிரித்தானியாவுக்கு வருவதையே தவிர்க்கவும் வாய்ப்புள்ளது என்கிறார் Duncan.