பிரித்தானிய அரச குடும்பத்தை மொத்தமாக கொதிப்படைய செய்த சம்பவம்: இளவரசர் ஹரி திட்டமிட்ட செயலா?
தொலைக்காட்சி ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரே உடனான மனம் திறந்த உரையாடலால் பிரித்தானிய அரச குடும்பம் மொத்தமாக கொதிப்படையும் என இளவரசர் ஹரிக்கு தெரிந்திருந்தும் அதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ஓப்ரா வின்ஃப்ரே உடனான மனம் திறந்த உரையாடலில் இளவரசர் ஹரி மற்றும் அவரது காதல் மனைவி மேகன் மெர்க்கல் பிரித்தானிய அரச குடும்பம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பிரித்தானிய அரச குடும்பம் இன ரீதியாக பாகுபாடு பார்த்ததாகவும், மேகன் மெர்க்கல் கண்கலங்கினார். குறித்த உரையாடலானது பிரித்தானிய அரச குடும்பத்தில் மொத்தமாக கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், இன ரீதியான குற்றச்சாட்டுக்கு, விசாரணைக்கு பின்னர் துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராணியார் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், ஓப்ரா வின்ஃப்ரே உடனான அந்த உரையாடல் உண்மையின் இளவரசர் ஹரி திட்டமிட்டது எனவும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து அவருக்கு தெரியும் எனவும்,
வேண்டும் என்றே அவர் அவ்வாறாக கருத்துகளை வெளியிட்டார் எனவும், அதில் இளவரசர் ஹரிக்கு துளியும் கவலை இல்லை எனவும் பிரித்தானிய அரச குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அரச குடும்பத்தில் ஒரு நடிகையான மேகன் மெர்க்கல் இணைந்து கொள்வது அவருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கும், ஆனால் தாம் ஒரு அமெரிக்கர் என்பதால் அதில் சிக்கல் ஏற்படும் என்பதை அவர் மிக விரைவிலேயே உணர்ந்தார் எனவும்,
வாழ்க்கையில் அது நாள் வரை தமது கருத்துகளை வெளிப்படையாக பேசி வந்துள்ள மேகன் மெர்க்கல், அரச குடும்பத்து உறுப்பினர் ஆனதும், அந்த சுதந்திரம் மொத்தமாக பறிபோனதால் கண்டிப்பாக மனக்குழப்பத்தில் சிக்கியிருப்பார் எனவும் அரச குடும்பம் தொடர்பில் தகவல் சேகரிக்கும் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுமின்றி, இளவரசர் ஹரி மற்றும் மேகன் போன்று, பிரித்தானிய அரச குடும்பத்தை விமர்சித்தவர்கள் இதுவரை யாரும் இல்லை எனவும், அவ்வாறு விமர்சிக்கும் துணிவு என்பது திட்டமிட்டதாகவே பார்க்கப்படுகிறது என அந்த நபர் தெரிவித்துள்ளார்.
அதனாலையே, இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகளுக்காக பிரித்தானியா வந்திருந்த ஹரிக்கு அரச குடும்பத்து உறுப்பினர்களால் உரிய மரியாதை வழங்கப்படவில்லை எனவும்,
ஆனால் மேகன் குறிப்பிட்டிருந்த இனவாத பாகுபாடு என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.