"ஹரி ஒன்றும் முட்டாள் அல்ல, அரச குடும்பத்தை வேண்டுமென்றே தான் தண்டிக்கிறார்" பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய நபர்
இளவரசர் ஹரியை முட்டாள் என நினைக்கவேண்டாம், அவர் தனக்கும் தனது மனைவிக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகத் தான் தனது குடும்பத்தை வேண்டுமென்றே தண்டித்து வருகிறார் என ஏஞ்சலா லேவின் கூறியுள்ளார்.
பிரித்தானிய அரச குடும்பத்தின் வாழக்கை வரலாற்று ஆசியரான ஏஞ்சலா லேவின் (Angela Levin), இன்று காலை Good Morning Britain நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இளவரசர் ஹரி குறித்து பல விடயங்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் இளவரசரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்காக 2018-ஆம் ஆண்டு ஒரு வருட காலமாக ஹரியுடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அந்த நிகழியில் கூறியதாவது;
இளவரசர் ஹரியை மக்கள் தொடர்ந்து முட்டாள் என கூறிவருகின்றன, ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை. அவர் என்ன செய்கிறோம் என தெரிந்துதான் எல்லாவற்றையும் செய்துவருகிறார். ஏனென்றால் தனது குடும்பத்தினர் தனக்கும் தனது மேகனுக்கும் அநீதி இழைத்துள்ளார்கள் என நினைக்கிறார்.
இதனால், ராயல் குடும்பத்திலிருந்து பந்தத்தை உடைத்துக்கொண்டு வெளியேற எந்த வித தகவல்களையும் மேகனின் நபர்கள் வாயிலாக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த விஷயங்கள் மிகவும் மென்மையானவை, குறிப்பாக ஹரியின் தாத்தா இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் 20 நிமிடங்களில் இதுபோன்ற பயங்கரமான பிரச்சினைகளை சரிசெய்ய முடியாது.
ராயல் குடும்பத்தினர் இனி அவரை நம்ப போவது இல்லை. மேகனும் இனி என்ன சொன்னாலும், அவர்கள் மெதுவாகவும் சாதுரியமாகவும் அடிஎடுத்து வைத்தாலும், இந்த பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது தெரியவில்லை.
ஆனால், இரக்க குணத்தைப் பற்றி அவர்கள் இருவருமே பொதுவெளியில் பேசுவது அர்த்தமற்றது, ஏனென்றால் அவர்களே இரக்கமுள்ளவர்கள் அல்ல.
ஹரி எதையும் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இது அதிர்ச்சியூட்டும் மற்றும் மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
நான் அவருடன் ஒரு வருடத்திற்கும் மேலாக செலவிட்டேன், அவர் பயங்கரமானவர். அவர் நேர்மறையானவர், அவருக்கு பல பிரச்சினைகள் இருந்தன, ஆனால் குடும்பத்தினர் அவரை ஒரு பாதிக்கப்பட்டவராக அடையாளம் காணவில்லை.
இப்போது அவர் பயங்கரமாக மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு ஏஞ்சலா லேவின் கூறினார்.