குடும்பப் பிரச்சினையை தீர்ப்பதற்காக இளவரசர் ஹரி சொன்ன யோசனை: தேநீரை துப்பிய கமீலா
இளவரசர் ஹரியும் மேகனும் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி அமெரிக்கா சென்றபின், இளவரசர் ஹரி தன் தந்தை சார்லசையும் கமீலாவையும் சந்தித்திருக்கிறார்.
அப்போது, தனக்கும் தன் தந்தைக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஹரி கூறிய யோசனையைக் கேட்ட கமீலா, தான் குடித்துக்கொண்டிருந்த தேநீரைத் துப்பிவிட்டாராம்.
முன்னாள் இளவரசரும் இந்நாள் மன்னருமான சார்லசுடனான பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இளவரசர் ஹரி சொன்ன யோசனையைக் கேட்டு, குடித்துக்கொண்டிருந்த தேநீரைத் துப்பிவிட்டாராம் சார்லசின் மனைவியான கமீலா.
இளவரசர் ஹரியும் மேகனும் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி அமெரிக்கா சென்றதைத் தொடர்ந்து அவர்களுக்கும் ராஜகுடும்பத்துக்குமான உறவில் பெரும் பிளவு ஏற்பட்டது.
ஹரியும் மேகனும் ஓபராவுக்கு அளித்த பேட்டி அந்தப் பிளவை மேலும் அதிகமாக்கியது.
Credit: Rex Features
இந்நிலையில், இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக செல்லும் வழியில், இளவரசர் ஹரி தன் தந்தை சார்லசையும் கமீலாவையும் சந்தித்திருக்கிறார்.
அப்போது, தனக்கும் தன் தந்தைக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு மத்தியஸ்தரை ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஹரி கூற, கமீலா, தான் குடித்துக்கொண்டிருந்த தேநீரைத் துப்பிவிட்டாராம்.
Credit: Rex
உன்னுடய யோசனை அபத்தமானது என்று ஹரியின் முகத்துக்கு நேரே கூறிய கமீலா, நாமெல்லாரும் ஒரு குடும்பம், குடும்பப் பிரச்சினைகளை குடும்பத்தினர்தான் தீர்த்துவைக்கவேண்டும் என்றாராம்.
இந்த தகவலை, ராஜகுடும்ப நண்பர் ஒருவர் ராஜகுடும்ப நிபுணரான Katie Nicholl என்பவரிடம் தெரிவிக்க, அதை அவர் தனது புத்தகமான The New Royals என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Credit: Reuters