இளவரசர் ஹரிக்கு விரைவில் கிடைக்கவிருக்கும் பெரும் தொகை: வில்லியமை விட அதிகம்
பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு இன்னும் சில வாரங்களுக்குள் சுமார் 7 மில்லியன் பவுண்டுகள் கிடைக்க உள்ளன.
இளவரசர் ஹரிக்கு கிடைக்கவிருக்கும் பெரும் தொகை
மறைந்த எலிசபெத் மகாராணியாரின் தாயான முதலாம் எலிசபெத் ராணியார், தனது குடும்பத்துக்காக ஒரு அறக்கட்டளையை நிறுவி, தன் குடும்ப உறுப்பினர்களுக்காக சுமார் 70 மில்லியன் பவுண்டுகளை வைத்துச் சென்றுள்ளார்.
Image: Getty Images for Project Healthy
இளவரசர் ஹரிக்கு 40 வயதாகும்போது, அந்த பணத்திலிருந்து அவருக்கு 7 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும்.
செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி, ஹரி 40 வயதை எட்டுவார். அப்போது அவருக்கு இந்த தொகை வழங்கப்படும்.
இளவரசர் வில்லியமை விட அதிகம்
முதலாம் எலிசபெத் ராணியார், இளவரசர் வில்லியமைவிட ஹரிக்கு அதிகம் பணம் கிடைக்கும் வகையில் எழுதிவைத்துச் சென்றுள்ளார்.
காரணம் என்னவென்றால், சார்லசுக்குப்பின் வில்லியம் மன்னராகிவிடுவார். அதனால் அவருக்கு பல சொத்துக்கள் கிடைக்கும்.
ஆனால், ஹரிக்கு அப்படியல்ல. ஆகவேதான் வில்லியமைவிட ஹரிக்கு கூடுதல் தொகை கிடைக்க அவரது பூட்டியார் வழிவகை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |