இளவரசர் ஹரி இங்கிலாந்து பயணம்: மேகன் மார்க்கல், குழந்தைகள் பயணத்திட்டத்தில் மாற்றம்
பிரித்தானியாவுக்கு இளவரசர் ஹரி மட்டும் தனியாக பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியாக பிரித்தானியாவுக்கு செல்லும் இளவரசர் ஹரி
அடுத்த வாரம் பிரித்தானியாவுக்கு தனியாக இளவரசர் ஹரி பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், அவருடன் அவரது மனைவி மேகன் மார்க்கல் மற்றும் குழந்தைகளான ஆர்த்தி மற்றும் லிலிபெட் ஆகியோ பயணம் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.
அரசு நிதியுதவி உடன் கூடிய காவல்துறை பாதுகாப்பு கிடைக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இளவரசர் ஹரியின் இந்த பயணத் திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தனியாக பிரித்தானியா செல்லும் இளவரசர் ஹரி, புதன்கிழமை ராயல் ஹாஸ்பிடல் செல்சியா பகுதியில் நடைபெறும் இன்பிக்டஸ் கேம்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
ஆனால் வார இறுதியில் பர்மிங்காமில் நடைபெறும் ன்பிக்டஸ் கேம்ஸ் நிகழ்ச்சியில் இளவரசர் ஹரியுடன் அவரது மனைவி மேகன் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால் இன்னும் மேகன் மற்றும் குழந்தைகளின் லண்டன் பயணம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அரசரை சந்திக்கிறாரா இளவரசர் ஹரி
லண்டன் வரும் இளவரசர் ஹரி பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் சந்திப்பதற்கான திட்டம் குறித்தும் இதுவரை நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக மன்னர் சார்லஸை இளவரசர் ஹரி சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பக்கிங்ஹாம் அரண்மனையும் இதுவரை இந்த சந்திப்பு குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |