ராஜ குடும்பத்தை பிரித்தது இளவரசர் ஹரி அல்ல... இளவரசர் வில்லியம்தான்: வெளியாகும் புதிய தகவல்
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனால் ராஜ அரண்மனை ஊழியர்களுக்கு பிரச்சினை ஏற்பட்ட நேரத்தில், குடும்பத்தை பிரித்தது இளவரசர் ஹரி அல்ல, வில்லியம்தான் என்னும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
2018ஆம் ஆண்டு, ஹரி மேகனின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட அரண்மனை ஊழியர்கள் தொடர்ந்து அவர்கள் மீது புகார்களைக் கூற, அரண்மனையில் பெரும்குழப்பம் உருவானது.
ஹரி தங்கள் உதவியாளர்களிடம் கன்னாபின்னாவென்று கத்த, விடயம் மகாராணியார் வரை சென்றது நினைவிருக்கலாம். அதே நேரத்தில், இளவரசர் வில்லியமும் அவர் மனைவி கேட்டும், அரண்மனை ஊழியர்களான தங்கள் உதவியாளர்களை பெரும் சொத்தாக மதித்து உரிய கௌரவம் கொடுப்பது வழக்கம்.
ஆகவே, ஊழியர்கள் புகார் அதிகரித்துக்கொண்டே செல்ல, இளவரசர் வில்லியம் அது குறித்து கேட்பதற்காக தன் தம்பி ஹரியை தொலைபேசியில் அழைக்க, உரையாடல் உச்சத்தை எட்ட, படாரென தொலைபேசியின் ரிசீவரை சாத்தினாராம் ஹரி.
அப்போதே இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார், Robert Lacey என்ற ராஜ குடும்ப எழுத்தாளர் தனது புத்தகத்தில்.
ஏற்கனவே, ஹரி மேகனை அறிமுகப்படுத்திய சமயத்திலேயே, வில்லியம் தம்பியிடம் அவசரப்படவேண்டாம் , பொறுமையாக இரு என்று கூறியிருக்கிறார். ஆனால், காதல் கண்ணை மறைக்க ஹரி யாருடைய ஆலோசனையையும் கேட்கும் நிலையில் இல்லை.
அப்போதே, மேகன் ஒரு திட்டத்துடன்தான் ஹரியை திருமணம் செய்கிறார், அவர் தம்பியை குடும்பத்திலிருந்து பிரித்துவிடுவார் என அஞ்சினாராம் வில்லியம். இந்த விடயங்களை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள Robert Lacey, மற்றொரு விடயத்தையும் தெரிவித்துள்ளார்.
தான் ராஜ குடும்பத்தால் பாதிக்கப்பட்டதாக மேகன் ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தார், ஆனால், உண்மையில் அவர்தான் மற்றவர்களை வம்பிழுப்பவர் என்று அரண்மனை ஊழியர்கள் பலர் தெரிவித்ததாக தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார் Robert Lacey.
ஆக, இப்படிப்பட்ட ஒரு சூழலில், தொல்லை கொடுக்கும் மேகனிடமிருந்து விலகிக்கொள்வதற்காக வில்லியம்தான் குடும்பத்தைப் பிரித்தார், ஹரி அல்ல என்கிறார் Robert Lacey.