பிரித்தானிய ராணியாரின் மறைவு வரை காத்திருக்கும் ஹரி: மொத்தமும் அல்பலப்படுத்தும் 4 புத்தகங்கள்
பிரித்தானிய இளவரசர் ஹரி தமது வாழ்க்கை தொடர்பில் மொத்த தகவலும் ஒளிவு மறைவின்றி புத்தகமாக வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு புத்தகம் அவரது பாட்டியும் பிரித்தானிய ராணியாருமான இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் வெளியாகும் என கூறப்படுகிறது.
இளவரசர் ஹரி முதன்மை நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தமது வாழ்க்கையில் இதுவரை எதிர்கொண்ட சம்பவங்கள் தொடர்பில் புத்தகமாக வெளியிட உள்ளார்.
மொத்தம் 4 புத்தகங்களாக வெளியாக இருக்கும் இதில், முதல் புத்தகம் அடுத்த ஆண்டும், இரண்டாவது புத்தகம் 94 வயதான ராணியாரின் மறைவுக்கு பிறகு வெளியாகும் என்றே தெரிய வந்துள்ளது.
இந்த 4 புத்தகங்களுக்காக அந்த நிறுவனம் இளவரசர் ஹரிக்கு 29 மில்லியன் பவுண்டுகள் அளிக்க உள்ளது. மேலும் இதே நிறுவனம் சார்பில் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலும் ஒரு புத்தகம் எழுத உள்ளார்.
சமீபத்தில் சிறார்களுக்காக மேகன் மெர்க்கல் எழுதிய புத்தகம் அதிக வரவேற்பின்றி மக்களால் புறக்கணிக்கப்பட்டது. இளவரசர் ஹரி தமது வாழ்க்கை தொடர்பில் எழுதவிருக்கும் புத்தகங்களுக்கு அவர் 18 மில்லியன் பவுண்டுகள் முதல் பேரம் பேசியதாகவும், இறுதியில் 29 மில்லியன் பவுண்டுகளுக்கு முடிவானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஹரியின் இரண்டாவது புத்தகம் ஏன் ராணியார் மறைவு வரை தாமதப்படுத்தப்படுகிறது என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
குறித்த புத்தகத்தில் ஹரி உண்மையில் ராணியாரை குறி வைக்க உள்ளாரா என்பது தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது.