அந்த பெண்ணுக்காக உன்னை யாராவது விட்டு விட்டு செல்வார்களா?: இளவரசர் பிலிப் டயானாவுக்கு எழுதிய கடிதம்
கமீலாவுக்காக உன்னைப்போல் ஒரு பெண்ணை விட்டு விட்டு விட்டு ஒருவர் செல்வார் என்பதை என்னால் கற்பனைகூட செய்துபார்க்கமுடியவில்லை என டயானாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார் இளவரசர் பிலிப்.
1981ஆம் ஆண்டு, இளவரசி டயானா இளவரசர் சார்லஸை திருமணம் செய்தபோது, அவரை வரவேற்க சிறப்பு முயற்சிகள் எடுத்தவர் இளவரசர் பிலிப்.
அவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சினை என்பது தெரியவந்தபோது, ஒரு திருமண ஆலோசகர் போல மருமகளுக்கு பல கடிதங்கள் எழுதி ஆலோசனைகள் அளித்தார் அவர்.
அரண்மனை சமையல்காரரான பால் பரல் என்பவர் அது குறித்து கூறும்போது, டயானாவுடனான சார்லசின் திருமணம் முறிந்துவிடக்கூடாது என்பதற்காக, சார்லஸைவிட அதிகம் முயற்சி செய்தவர் அவரது தந்தையான இளவரசர் பிலிப்தான் என்கிறார்.
டயானாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், தன் மகனுக்கும் கமீலாவுக்கு இடையில் தவறான உறவு இருப்பது தெரியவந்தது குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் பிலிப். அதே நேரத்தில், பின்னர் டயானா வேறொருவருடன் பழகுவதை அறிந்த பிலிப், நீங்கள் இருவருமே காதலர்களை வைத்துக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
இப்படி ஒரு உயர்ந்த நிலையில் இருக்கும் சார்லஸ், கமீலாவுக்காக ரிஸ்க் எடுப்பது சில்லியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பிலிப், கமீலாவுக்காக சார்லஸ் உன்னை விட்டு பிரிய முடிவு செய்வார் என்று நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கமீலா போன்ற ஒரு பெண்ணுக்காக, நல்ல மன நிலையில் இருக்கும் ஒருவரால் உன்னை விட்டு பிரியமுடியும் என்பதை என்னால் கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை என்று கூறியுள்ள பிலிப், இப்படி ஒரு விடயம் எங்கள் மனதில் தோன்றவேயில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இளவரசர் பிலிப்புக்கும், அவரது மருமகளான இளவரசி டயானாவுக்கும் இடையிலான இந்த கடித போக்குவரத்து 1992ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், டயானாவும் சார்லஸும் பிரிந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையும் தொடர்ந்தது.
மகனும் மருமகளும் பிரிந்த பிறகு, அதுவும் குறிப்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தன் திருமணம் உடைந்தது முதல் பல்வேறு விடயங்களை டயானா வெளிப்படையாக கூறிய நிலையில், இளவரசர் சார்லஸ் மன்னாராகும் தகுதி உடையவர் அல்ல என்றும் கூறியிருந்தார்.
தன் மகனும் மருமகளும் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக தான் எடுத்த முயற்சிகள்
அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், அதன் பிறகு டயானாவுக்கு கடிதம் எழுதுவதை
நிறுத்திக்கொண்டார் இளவரசர் பிலிப்.