பிரித்தானிய இளவரசர் பிலிப் இறந்தது எப்படி? வெளியானது இறப்பு சான்றிதழ்
பிரித்தானிய இளவரசர் பிலிப் வயது மூப்பு காரணமாகவே காலமானதாக அவரது இறப்பு சான்றிதழிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளவரசர் பிலிப் தமது 99ம் வயதில் அமைதியான முறையில் மரணமடைந்ததாக கடந்த மாதம் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
இந்த நிலையில் அவரது இறப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இளவரசர் பிலிப் வயது மூப்பு காரணமாக இறந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இளவரசரின் இறப்புக்கு வேறு அடையாளம் காணக்கூடிய நோய் அல்லது காயம் காரணமல்ல எனவும், அவர் இறப்பதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட இதய அறுவை சிகிச்சைக்கும் அவர் இறப்புக்கும் தொடர்பு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளவரசர் காலமான பின்னர் நான்கு நாட்களுக்கு பிறகு, அவரது இறப்பு உரிய முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவரது இறப்பு சான்றிதழில், அவர் கடற்படை அதிகாரி என்றும் ஐக்கிய இராச்சியத்தின் இளவரசர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.