இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்படும் சவப்பெட்டி புறப்பட்டது! வெளியான வீடியோ
பிரித்தானியா இளவரசர் நல்லடம் இன்று செய்யப்படவுள்ள நிலையில், அவர் அடக்கம் செய்யப்படும் சவப்பெட்டி லேண்ட் ரோவர் காரில் ஏற்றப்பட்டுள்ளது.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவசரருமான பிலிப்(99) கடந்த வெள்ளிக் கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, எட்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு இன்று, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதற்கான இறுதி ஊர்வலம் இன்று மாலை உள்ளூர் நேரப்படி 3 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரின் இறுதி ஊர்வலம் வின்ஸ்டரில் துப்பாக்கிச் சத்ததுடன் துவங்கியது.
பிற்கபகல் 2.30 மணிக்கு இசை குழுக்கள் இசைக்க, அவரது சவப்பெட்டி லேண்ட் ரோவர் காரில் ஏற்றப்பட்டது.
இதையடுத்து இறுதி ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது. குறித்த ஊர்வலம் தேவாலயத்தை அடைய எட்டு நிமிடங்கள் ஆனது.
விண்ஸ்டர் மாளிகையில் கிழக்கு புல்வெளியில் இருந்து இறுதி ஊர்வலத்தின் பயணத்தின் ஒவ்வொரு நிமிடமும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் துப்பாக்கியால் சுடப்பட்டது.
சவப்பெட்டியைத் தொடர்ந்து இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி அன்னே தலைமையிலான மூத்த ராயல் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.