இளவரசர் வில்லியமுக்குக் கிடைத்த 23 மில்லியன் பவுண்டுகள்: அதை என்ன செய்தார் தெரியுமா?
பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு 7 மில்லியன் பவுண்டுகள் கிடைக்க இருப்பதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது நினைவிருக்கலாம்.
தற்போது, இளவரசர் வில்லியமுக்கு 23 மில்லியன் பவுண்டுகள் கிடைத்துள்ளதைக் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் வில்லியமுக்குக் கிடைத்த 23 மில்லியன் பவுண்டுகள்
எலிசபெத் மகாராணியார் மறைந்ததும், அவரது மகனான இளவரசர் சார்லஸ் மன்னரானார். சார்லஸ் மன்னரானதும், அரியணையேறும் வரிசையில் அடுத்த நபராக முன்னேறினார் இளவரசர் வில்லியம்.
அப்போது, அவரது தந்தையிடமிருந்த சொத்துக்களில் ஒன்றான Duchy of Cornwall estate என்னும் சொத்து வில்லியமை வந்தடைந்தது.
கடந்த ஆண்டில், அந்த எஸ்டேட்டில் நல்ல வருமானம் கிடைத்துள்ளதால், அதில் கிடைத்த லாபத்திலிருந்து வில்லியமுக்கு 23 மில்லியன் பவுண்டுகள் கிடைத்துள்ளன.
இந்த பணத்தை வில்லியம் தனக்கும் தன் குடும்பத்தும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதை என்ன செய்தார் தெரியுமா?
ஆனால், இளவரசர் வில்லியமும் சரி, இளவரசி கேட்டும் சரி, வெளியே தெரியாமல், அதாவது தங்களைத்தாங்களே விளம்பரப்படுத்திக்கொள்ளாமல், தொண்டு நிறுவனங்களுக்கு பெரிய அளவில் நன்கொடை கொடுக்கும் குணம் கொண்டவர்கள்.
ஆக, தற்போது கிடைத்த 23 மில்லியன் பவுண்டுகளில் உக்ரைன் போருடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்கள், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் தொடர்பான தொண்டு நிறுவனங்களுக்கும்,
லண்டன் ஏர் ஆம்புலன்ஸ் சேவை, மன நலன் ஆதரவு தொண்டு நிறுவனங்கள் என பல சேவை அமைப்புகளுக்கும் நன்கொடையாக வழங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |