இது பாதிப்யை ஏற்படுத்தும்! இளவரசர் வில்லயம் எச்சரிக்கை
ஐரோப்பிய சூப்பர் லீக் குறித்து இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் தலைவர் இளவரசர் வில்லயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, ஐரோப்பாவின் 12 முன்னணி கால்பந்து கிளப்புகளான ஏசி மிலன், அர்செனல், அட்லெடிகோ மாட்ரிட், செல்சியா, பார்சிலோனா, இன்டர் மிலன், ஜுவென்டஸ், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஆகியவை புதிய ஐரோப்பிய கிளப் கால்பந்து போட்டியான ‘சூப்பர் லீக்’ நிறுவப்படுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
சூப்பர் லீக் தொடங்குவதற்கான அறிவிப்புக்கு பிபா மற்றும் UEFA தலைவர்களிடமிருந்து மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளின் தேசிய கால்பந்து சங்கங்களிடமிருந்தும் பரவலான விமர்சனங்களை சந்தித்தது.
பிரெஞ்சு பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன், ஜெர்மன் பேயர்ன் முனிச், போருசியா டார்ட்மண்ட் மற்றும் போர்த்துகீசிய போர்டோ ஆகிய முன்னணி அணிகள் சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்க மறுத்துவிட்டன.
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் போட்டியை உருவாக்குவதை பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அந்த வரிசையில், இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் தலைவர் இளவரசர் வில்லயம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
[PAXFBB ]
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, முன்னெப்போதையும் விட இப்போது , உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை முழு கால்பந்து சமூகத்தையும், போட்டியின் நன்மதிப்புகள் மற்றும் அதன் அடிப்படை நேர்மையை நாம் பாதுகாக்க வேண்டும்.
முன்மொழியப்பட்ட சூப்பர் லீக் மற்றும் இது நாம் விரும்பும் விளையாட்டுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு பற்றிய ரசிகர்களின் கவலைகளை நான் பகிர்கிறேன் என இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் தலைவர் இளவரசர் வில்லயம் பதிவிட்டுள்ளார்.