என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை... தலையில் காயங்களுடன் தப்பிய பிரித்தானிய இளவரசி

Royal Family Accident
By Arbin Jun 25, 2024 03:24 AM GMT
Report

குதிரை மிதித்ததில் தலையில் காயங்களுடன் தப்பியுள்ள பிரித்தானிய இளவரசி ஆன், தமக்கு என்ன நடந்தது என்பது குறித்து நினைவுப்படுத்த தவறியதாக கூறப்படுகிறது.

நினைவுப்படுத்த முடியாமல்

பிரித்தானிய இளவரசி ஆன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். 73 வயதான இளவரசி ஆன் ஞாயிற்றுக்கிழமை இரவு Gloucestershire இல் உள்ள காட்கோம்பே பார்க் எஸ்டேடில் நடந்த ஒரு சம்பவத்தில் காயமடைந்தார்.

என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை... தலையில் காயங்களுடன் தப்பிய பிரித்தானிய இளவரசி | Princess Anne Not Able To Recall What Happened

தற்போது அவர் பிரிஸ்டலில் உள்ள சவுத்மீட் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்றே பக்கிங்ஹாம் அரண்மனை வெளிப்படுத்தியுள்ளது. இளவரசிக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை,

ஆனால் அவர் முழுமையாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரண்மனை வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இளவரசி ஆன், தமக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என்பதை நினைவுப்படுத்த முடியாமல் உள்ளார் என்றும் மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை... தலையில் காயங்களுடன் தப்பிய பிரித்தானிய இளவரசி | Princess Anne Not Able To Recall What Happened

குதிரைகள் மீது மிகுந்த அன்பு கொண்ட இளவரசி ஆன், 1976ல் கனடாவின் மாண்ட்ரீலில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் அரச குடும்பத்து உறுப்பினராவார்.

மட்டுமின்றி, அவர் 28 வெவ்வேறு குதிரைகள் மற்றும் விலங்குகள் தொடர்பான தொண்டு நிறுவனங்களுக்கு அரச குடும்பத்து புரவலராகவும் உள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

நிபுணர்களின் கண்காணிப்பில்

நேற்று மாலை காட்கோம்பே பார்க் தோட்டத்தில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து இளவரசி ஆன் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், உரிய நிபுணர்களின் கண்காணிப்பில் இளவரசி ஆன் உள்ளார் என்றும், மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, இளவரசியின் காயம் என்பது குதிரையின் தலையால் அல்லது காலால் ஏற்பட்டிருக்கலாம் என்றே முதலுதவி அளித்த மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை... தலையில் காயங்களுடன் தப்பிய பிரித்தானிய இளவரசி | Princess Anne Not Able To Recall What Happened

இதனிடையே, ஞாயிறு இரவு 9.15 மணியளவில் ஏர் ஆம்புலன்ஸ் தரையிறங்குவதைப் பார்த்ததாகவும், இரவு 9.23 மணி முதல் பொலிஸ் ஹெலிகொப்டர் வட்டமிட்டதாகவும் உள்ளூர் நபர் ஒருவர் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்தபோது மகள் ஜாரா டிண்டால் மற்றும் மகன் பீற்றர் பிலிப்ஸ் ஆகியோர் அந்த நேரத்தில் தோட்டத்தில் இருந்தனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US