பிரித்தானிய இளவரசி டயானா நேசித்து பயன்படுத்திய பொருள் ஏலத்தில் விற்பனை! சுவாரசிய தகவல்கள்
பிரித்தானிய இளவரசி டயானா பயன்படுத்திய கார் ஏலத்தில் வரும் நிலையில் அது குறித்த சுவாரசியமான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.
டயானா உயிரிழந்து 25 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவர் மிகவும் விரும்பி நேசித்து பயன்படுத்திய போர்ட் எஸ்கார்ட் ஆர்.எஸ் கார் ஏலத்தில் விற்பனைக்கு வருகின்றது.
இந்த காரை டயானா 1985ல் இருந்து 1988 வரை ஓட்டியிருக்கிறார். குறித்த கார் ஏலத்தில் எவ்வளவுக்கு போகும் என்பது இன்னும் சரியாக தெரியாத நிலையில் எப்படியும் £100,000க்கு வாங்கப்படும் என ஏலதாரர்கள் கருதுகின்றனர்.
Brendan Beirne/Shutterstock
இது தொடர்பாக ஏல நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், 132 குதிரைத்திறன் கொண்ட டயானாவின் கார் அவரது முந்தைய கார்களுக்கு மாற்றாக அமைந்தது. நாங்கள் அரச பரம்பரையை சேர்ந்தவர்களின் பல மோட்டார் வாகனங்களை ஏலத்தில் விற்றுள்ளோம், ஆனால் இந்த கார் வரலாறு மிக அரிதானது.
அரச குடும்பத்தினரின் பழைய கார்கள் ஏலத்திற்கு வரும்போது, அவை பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் அல்லது ரேஞ்ச் ரோவர்ஸ் ஆக தான் இருக்கும். ஆனால் இந்த முறை வேறு கார் வந்துள்ளது தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது என கூறியுள்ளார்.
டயானா பயன்படுத்திய பின்னர் குறித்த காரை வேறு சிலரும் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tim Graham via Getty Images