மன்னர் பணிக்குத் திரும்பிய நிலையில் இளவரசி கேட் தாமதிப்பது ஏன்?
பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் என அறிவிப்பு வெளியானதால் மக்கள் அதிர்ச்சியடைந்திருக்க, அடுத்த செய்தியாக, இளவரசி கேட்டுக்கும் புற்றுநோய் என தெரியவந்ததால் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தார்கள் அவர்கள். ஆனாலும், சீக்கிரமே மன்னர் சார்லஸ் பணிக்குத் திரும்பிவிட்டார்.
இளவரசி கேட் பணிக்குத் திரும்ப தாமதிப்பது ஏன்?
பிரித்தானியாவைப் பொருத்தவரை, ராஜ குடும்பத்தினர் எப்போதுமே எதிர்காலம் குறித்து முன்கூட்டியே திட்டமிடுபவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மன்னர் அல்லது மகாராணி பதவிலிருக்கும்போதே, அவர்கள் இறந்தால் இறுதிச்சடங்கு செய்வது எப்படி, அடுத்து யார் பதவிக்கு வரவேண்டும் என்றெல்லாம் அவர்கள் திட்டம் தீட்டுவார்கள்.
ஆக, இளவரசி கேட்டைப் பொருத்தவரை, அவர் வருங்கால மன்னரின் மனைவி, ராணி! ஆகவே, அவரது உடல் நலத்தில் கவனம் செலுத்த அரண்மனை வட்டாரம் முடிவு செய்துள்ளது. அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, யாரும் இளவரசி கேட்டுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுப்பதை விரும்பவில்லை, இப்போதைக்கு முக்கியமான விடயம், அவருடைய உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படுவதுதான் என்று கூறியுள்ளார்.
வருங்கால ராணி என்ற முறையில், அவரது நலன் முக்கியத்துவம் வாய்ந்தது, ஆகவே, அவர் பொறுமையாக ஓய்வெடுத்துக்கொண்டு பின்னர் பணிக்குத் திரும்பட்டும், சில பணிகள் காத்திருக்கலாம் என்கிறார் அவர்.
மன்னருக்கும் இளவரசிக்கும் வித்தியாசம் உள்ளது, மன்னருடைய நிலைப்பாடு வேறு, அவர் தற்போது ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். அவரைப்போலவே இளவரசி கேட்டும் தான் குணமடைந்துகொண்டிருக்கும் நேரத்திலேயே பொதுமக்கள் முன் தோன்றவேண்டுமென்ற அவசியமெல்லாம் இல்லை என்றும் கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |