பணிக்குத் திரும்பினார் இளவரசி கேட்: மக்களை மனம் குளிரவைத்த காட்சிகள்
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய் கண்டறியப்பட்டபிறகு, முதன்முறையாக அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
உடல் நலம் பாதிக்கப்பட்ட இளவரசி கேட்
பிரித்தானிய இளவரசியும், வருங்கால ராணியுமான, இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்கு ஜனவரி மாதம் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து அவருக்கு புற்றுநோய் பாதித்திருந்தது தெரியவந்தது.
ஆகவே, அவர் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ஓய்வெடுக்க மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டதாலும், பின்னர் புற்றுநோய் சிகிச்சை துவங்கியதாலும் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.
ஆகவே, அவர் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை, இப்போதைக்கு அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளமாட்டார் என்றும், அவர் மீண்டும் பணிக்குத் திரும்பாமலே போகலாம் என்றும் செய்திகள் வெளியானவண்ணம் இருந்தன.
மக்களை மனம் குளிரவைத்த காட்சிகள்
ஆனால், அந்த செய்திகளையெல்லாம் பொய்யாக்கும் வகையில், இன்று அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் இளவரசி கேட். இன்று, பிரித்தானியாவை ஆளும் மன்னரின் பிறந்தநாளை பிரித்தானியா அதிகாரப்பூரவமாகக் கொண்டாடும் Trooping the Colour என்னும் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.
அந்த நிகழ்ச்சியின்போது, மன்னருக்கு குதிரை வீரர்கள் மரியாதை செலுத்தியபின், பக்கிங்காம் அரண்மனையின் பால்கனியில் ராஜ குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நின்று விமானப்படை நடத்தும் சாகசக் காட்சிகளைக் கண்டுகளிப்பார்கள். மக்கள் ராஜ குடும்பத்தினரைக் கண்டு மகிழ்வார்கள்.
அந்த நிகழ்ச்சிக்காக, இளவரசி கேட், தன் கணவர் இளவரசர் வில்லியம், தங்கள் பிள்ளைகளான இளவரசர்கள் ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸுடன் பக்கிங்காம் மாளிகைக்கு வந்துள்ளார்.
இளவரசி கேட்டின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக தங்கள் அன்பிற்குரிய இளவரசியைக் காணாமல் தவித்து வந்த நிலையில், இன்று அவர் முதன்முறையாக பணிக்குத் திரும்பியுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
ஊடகங்கள் முழுவதும் இளவரசி கேட் மற்றும் அவரது குடும்பத்தினர் Trooping the Colour நிகழ்ச்சியில் பங்கேற்கும் புகைப்படங்களால் நிறைந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |