கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரித்தானிய இளவரசி இரத்தக்கட்டிகளால் அவதி
கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்கள் எடுத்துக்கொண்ட பிரித்தானிய இளவரசி இரத்தக்கட்டிகளால் அவதிக்குள்ளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசி 76 வயது Michael of Kent என்பவரே அரிதான இரத்தக்கட்டிகள் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்.
தங்களது இல்லத்திலேயே சிகிச்சையில் இருந்து வரும் இளவரசி Michael of Kent சுமார் ஒரு மாத காலமாக சிகிச்சையில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்திலேயே இளவரசி Michael of Kent ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றூக்கொண்டார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென்று நோய்வாய்ப்பட, உடனடியாக மருத்துவ உதவியை நாடியுள்ளனர். இளவரசி Michael of Kent-ன் நிலை குடும்ப உறுப்பினர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் இளவரசி Michael of Kent கொரோனாவால் அவதிப்பட்டுள்ளார். தொடர்ந்து மேற்கு லண்டனில் அமைந்துள்ள கென்சிங்டன் அரண்மனையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த நிலையிலேயே தற்போது இளவரசி Michael of Kent இரத்தக்கட்டிகள் சிக்கலால் அவதிக்குள்ளான தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இளவரசியின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கருத்துக்குற முடியாது என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மிக நெருங்கிய உறவினரையே இளவரசி Michael of Kent திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.