காதலி கொடுத்த முத்தத்தால் சிறைக்கைதி காதலன் மரணம்! பின்னர் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை
பிரவுன் போதைப்பொருள் குற்ற வழக்கில் 11 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருந்தார்
சிறைக் கைதியான பிரவுன், காதலி கொடுத்த அரை அவுன்ஸ் மெத்தாம்பெடமைன் போதைப்பொருளை மொத்தமாக விழுங்கியதால் உயிரிழந்தார்
அமெரிக்காவில் சிறையில் இருந்த நபர், தனது காதலியிடம் முத்தம் பெற்ற பின்னர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க நகரம் டென்னஸியில் உள்ள சிறையில் ஜோஷுவா பிரவுன் என்பவர் தண்டனை கைதியாக இருந்தார். அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவரை காண்பதற்கு அவரது காதலி ரேச்சல் டொலார்ட் சிறைக்கு வந்துள்ளார். அப்போது இருவரும் நீண்ட நேரம் முத்தம் கொடுத்துக் கொண்டனர். இதில் அந்த இடத்திலேயே பிரவுன் சுருண்டு விழுந்தார்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பிரவுன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதன் பின்னர் பிரவுனின் காதலி ரேச்சலைப் பிடித்து பொலிசார் விசாரணை நடத்தினர். தனது காதலருக்காக போதைப்பொருளை வாயில் வைத்துக் கொண்டு வந்த ரேச்சல், முத்தம் கொடுக்கும் சாக்கில் பிரவுனுக்கு அதனை கடத்த முயன்றுள்ளார். ஆனால், போதைப்பொருள் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் மொத்தமாக விழுங்கியுள்ளார்.
இதன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரவுன் உயிரிழந்ததும் தெரிய வந்தது. உடற்கூராய்வின்போது அவரது உடலில் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாம் நிலை கொலை, சிறைக்குள் போதைப்பொருட்களை கடக்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 33 வயதான ரேச்சல் கைது செய்யப்பட்டார்.