பெண் புலம்பெயர்ந்தோருக்காக பிரித்தானிய உள்துறைச் செயலர் எடுக்கவிருக்கும் நடவடிக்கை: உருவாகியுள்ள எதிர்ப்பு
பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதற்காக காத்திருக்கும் பெண் புலம்பெயர்ந்தோர் மற்றும் வெளிநாட்டு பெண் குற்றவாளிகளுக்காக, தனியாக புலம்பெயர்வோர் காவல் மையம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தை பிரித்தானிய உள்துறைச் செயலர் உறுதி செய்துள்ளார்.
இங்கிலாந்திலுள்ள Derwentside என்ற இடத்தில் பெண்களுக்கான அந்த புதிய புலம்பெயர்வோர் காவல் மையம் உருவாக்கப்பட உள்ளதாக பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார்.
அந்த புலம்பெயர்வோர் காவல் மையம், இந்த ஆண்டு, அதாவது, 2021 இறுதிக்குள் அமைக்கப்பட்டுவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த புலம்பெயர்வோர் காவல் மையம் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர்கள் அந்த புலம்பெயர்வோர் காவல் மையம் உருவாக்கப்பட இருக்கும் இடத்தின் அருகே கூடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
புலம்பெயர்ந்தோரை காவலில் வைப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்றும், அடைக்கலம் தேடுவது குற்றம் அல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.