நாடுகடத்தப்படுவதை மறுத்தால் ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தடைவிதிக்கும் திட்டம்... பிரீத்திக்கு புதிய அதிகாரங்கள்
ஒருவர் பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதை மறுத்தால், அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவரோ, அந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தடை விதிக்கும் வகையில், பிரித்தானிய உள்துறைச்செயலரான பிரீத்தி பட்டேலுக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
தேசிய மற்றும் எல்லை மசோதாவில் புதிதாக செய்யப்பட்டுள்ள சட்டத் தீருத்தங்களின்கீழ், நாடுகடத்தலுக்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது விசா தொடர்பான அபராதங்கள் விதிக்கவும், அவருக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
அத்துடன், மொத்தமாகவே ஒரு நாட்டின் விசாக்களை ரத்து செய்யவும், பிரித்தானியாவுக்கு வருவதற்காக செய்யப்படும் விண்ணப்பங்கள் மீது 190 பவுண்டுகள் உப கட்டணம் விதிக்கவோ அல்லது விசா பரிசீலிக்கும் காலகட்டத்தை நீட்டிக்கவோ செய்யவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
இந்த அதிகாரங்கள், கல்வி, பணி, விருந்தினர் மற்றும் குடியமர்தல் விசாக்கள் என அனைத்து வகை விசா சேவைகளையும் பாதிக்கக்கூடியவையாகும்.
ஒரு நாட்டின் குடிமக்களை நாடுகடத்த அல்லது வெளியேற்ற மற்ற நாடுகளை பிரித்தானியாவுடன் ஒத்துழைக்கவைப்பதற்காக இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
எனது புதிய புலம்பெயர்தல் திட்டத்தின் மூலமும், இந்த புதிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டத்தின் மூலமும், பிரித்தானிய மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதைச் செய்து, பிரித்தானியாவின் சீரற்ற புகலிட அமைப்பை சரி செய்யத் தேவையான, கடினமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்பேன்.
பிரித்தானிய மக்கள் பிரித்தானியாவின் எல்லைகள் பிரித்தானியாவின் முழுக் கட்டுப்பாட்டில் வரவேண்டும் என விரும்புகிறார்கள், அதைச் செய்வேன் என்று கூறியுள்ளார் பிரீத்தி பட்டேல்.