இந்திய பிரதமர் மோடியை கிண்டலடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி! வீடியோ வைரலானதால் எழுந்த கடும் சர்ச்சை
இந்திய பிரதமர் மோடியை விமர்சித்து தனியார் தொலைக்காட்சி சிறுவர்களை வைத்து எடுத்த நிகழ்ச்சி தொடர்பில் அத்தொலைக்காட்சி மன்னிப்பு கோரவேண்டுமென பாஜக வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் இருக்கும் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலில் குழந்தைகள் சம்பந்தமான நசைச்சுவை ரியாலிட்டி ஷோ-வில், புலிகேசி மன்னர் போலவும், மங்குனி அமைச்சராகவும் இரு குழந்தைகள் செய்த நகைச்சுவைக் காட்சி தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அந்த இரண்டு குழந்தைகளும் பிரதமர் மோடியின் கருப்பு பண நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளை விமர்சித்து வசனங்களை பேசியிருந்தனர்.
அதோடு வட மாநிலங்களில் தாங்கள் மாறுவேடத்தில் செல்ல வேண்டும் எனவும், தென்னகத்தில் மன்னராகவே வந்தாலும் யாரும் மதிக்க மாட்டார்கள் எனவும் நசைச்சுவையாக தெரிவித்தனர்.
தமிழ்நாடுன்னா சும்மாவா. pic.twitter.com/DJdF6tGXj7
— Jothimani (@jothims) January 16, 2022
இது தொடர்பான வீடியோவை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட திமுக, காங்கிரஸை சேர்ந்த வெளியிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து அந்த நகைச்சுவை காட்சிக்கு பாஜக-வினரிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை, மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு எல். முருகன் அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார்.
நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்! அவருக்கு என் நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் பெரிய பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், அது குறித்த வீடியோ குறித்த சேனலின் அதிகாரபூர்வ செயலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.