ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டும்! நடிகை பிரியா பவானி பகிர்ந்த புகைப்படம்
கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என நடிகை நடிகை பிரியா பவானி சங்கர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியை சுற்றிய பகுதிகளில் பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் பள்ளியில் உள்ள படுக்கையறை ஒன்றில் ஆணுறைகள் இருப்பதாக வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைதளத்தில் ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த நிலையில், பிரபல நடிகை அதே ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு மாணவி ஸ்ரீமதி மற்றும் அவரது தாயார் கதறி அழும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
#justiceforsrimathi pic.twitter.com/QBuilRicDW
— Priya BhavaniShankar (@priya_Bshankar) July 18, 2022
முன்னதாக நடிகர் ஹரிஷ் கல்யாண், மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும், நீதிக்காக கரம் சேர்ப்போம் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.