எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனை! பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவதால் ஏற்படும் சிக்கல்.. வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் எலிகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில் பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவதால் நினைவாற்றலை பாதிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஓகியோ பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றுள்ளது. 3 முதல் 24 வயதாகும் எலிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுத்து எலிகளின் நினைவாற்றலை ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அந்த ஆய்வில் இளம் வயதுடைய எலிகளுக்கு நினைவாற்றல் பாதிக்கப்படவில்லை. ஆனால் வயதான எலிகளுக்கு நினைவாற்றல் குறைத்திருப்பதையும் கண்டுபிடித்தனர்.
அதே போல உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை சேர்த்து சாப்பிட்டால் நினைவாற்றல் பாதிக்கப்படாமல் இருப்பதையும் ஆய்வில் கண்டுபிடித்தனர்.
மேலும் இந்த ஆய்வில் பதப்படுத்தும் பொருள்கள் சேர்க்கப்பட்ட உணவுகளான உருளைக்கிழங்கு சிப்ஸ், பிட்ஸா, நொறுக்கு தீனிகள் போன்ற உணவுகளை வயதானவர்கள் சாப்பிடுவதால் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிய வந்துள்ளது .