பாலஸ்தீனத்தை விடுவியுங்கள்! வெள்ளை மாளிகை முன் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்..புகைக்குண்டு வீச்சினால் பதற்றம்
அமெரிக்க வெள்ளை மாளிகை முன் பாலஸ்தீன ஆதரவாளர்கள் திரண்டபோது புகைக்குண்டு வீச்சினால் பதற்றம் ஏற்பட்டது.
காசா போர் நிறுத்த அழைப்பு
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் ஆரம்பித்ததில் இருந்து 1,200 இஸ்ரேலியர்களும் 36,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டனர்.
பல நாடுகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்த வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், காசா மீது போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை முன் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது 'பாலஸ்தீனத்தை விடுவிக்கவும்', 'இஸ்ரேல் ஒரு காசா கசாப்புக்காரன்' போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையை சுற்றி வளைக்க பயன்படுத்திய, பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை தாங்கிய மாபெரும் சிவப்பு நிற பதாகையை எதிர்ப்பாளர்கள் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்ட குழப்பம்
Lafayette சதுக்க பூங்காவில் மக்கள் கூட்டம் கூடியதால் பல சாலைகள் மூடப்பட்டன. அமைதியான போராட்டத்தை மட்டுமே ஆதரிப்பதாக வெள்ளை மாளிகை முன்பு கூறியது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது கூட்டத்தின் மீது புகைக்குண்டுகள் வீசப்பட்டன. இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதற்றத்திற்கு உள்ளாகினர். பங்கேற்பாளர்கள் தாங்கள் கொல்லப்பட்டதாக கூறினர்.
இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியான அமெரிக்கா, கடந்த பல மாதங்களாக பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்களைக் கண்டது. ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தில் இருந்து அவரது கொள்கைக்கு தங்கள் எதிர்ப்பை காரணம் காட்டி, குறைந்தபட்சம் 8 அதிகாரிகள் விலகியுள்ளனர்.
அதேபோல் பைடனின் மறுதேர்தல் பிரச்சார நிகழ்வுகளையும் எதிர்ப்பாளர்கள் சீர்குலைத்துள்ளனர். மேலும், ஜோ பைடன் பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்ட குழப்பம் வெளிப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |