பெண்களுக்கு இலவசம் வழங்குவது போல ஆண்களுக்கும் 2 மது போத்தல்கள் வழங்குங்கள்: எம்எல்ஏ சர்ச்சை
ஆண்களுக்கு வாரத்திற்கு இரு மது போத்தல்கள் வழங்குங்கள் என்று கர்நாடக எம்எல்ஏ சர்ச்சையாக பேசியுள்ளார்.
சர்ச்சை பேச்சு
சமீபத்தில் கர்நாடக சட்டமன்றத்தில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மமுதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தாக்கல் செய்தது. இதில், கலால் வரியை ரூ.40,000 கோடியாக அதிகரிக்க கர்நாடகா அரசு இலக்கு நிர்ணயித்தது.
இந்த பட்ஜெட்டில் பங்கேற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உறுப்பினர் எம்.டி.கிருஷ்ணப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் பேசுகையில், "கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மூன்று முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வரியை உயர்த்தினால் ரூ.40,000 கோடி என்ற இலக்கை அரசால் எப்படி எட்ட முடியும்? முக்கியமாக நாம் குடிக்கும் மக்களை தடுக்க முடியாது.
நமது வரி பணத்தில் இருந்து மகளிருக்கு ரூ.2,000 உதவித்தொகை, இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் ஆகியவை வழங்கப்படுகிறது.
அதே போலவே ஆண்களுக்கும் வாரத்திற்கு இரு மது போத்தல்கள் வழங்குங்கள். அவர்களும் குடிக்கட்டும். அவர்களுக்கு நாம் எந்த வகையில் பணம் கொடுக்க முடியும்" என்று பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |