சைக்கோவாக மாறி பெண்கள் மீது வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்ட நபர்! அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்
ஆந்திர மாநிலத்தை அதிரவைத்த சைக்கோ கொலைகாரன்.
தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை செய்தது அம்பலம்.
இந்தியாவில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை செய்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த சைக்கோ கொலைக்காரன் பொலிசில் சிக்கியுள்ளான்.
ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தை சேர்ந்த சந்தக ராம்பாபு, தனது 18 வயதில் இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
ஐதராபாத்தில் குடியிருந்தபோது அந்த வீட்டின் உரிமையாளருடன் மனைவிக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததால் அவரை 2018ம் ஆண்டில் ராம்பாபு பிரிந்தார்.
இந்நிலையில், பணிபுரிந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் உரிமையாளரால் ராம்பாபு ஏமாற்றப்பட்டதாக தெரிகிறது. வாழ்வில் விரக்தியடைந்த ராம்பாபு சைக்கோவாக மாற தொடங்கி, பெண்கள் மீது வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்டார்.
இதையடுத்து வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து அவர்களை கொலை செய்து பின்னர் பின்னர் சடலத்தை வன்கொடுமை செய்திருக்கிறார். கடந்த வாரம் வயதான தம்பதியை கொலை செய்த பின்னர், கட்டுமானத்தில் உள்ள கட்டிடங்களுக்கு வாட்ச்மேன்களாக பணியாற்றிய மூன்று பேரின் குடும்ப பெண்களையும் அடுத்தடுத்து கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலைகளுக்கெல்லாம் இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் பொலிசார் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ராம்பாபுவை பிடித்து விசாரித்தபோதுதான், அனைத்து உண்மைகளும் தெரிந்தது.
இதையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.