சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வீடியோ! கோடிக்கணக்கில் வருமானம்... தமிழகத்தை அதிரவைத்த யூ-டியூபர் பப்ஜி மதன் கைது!
சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வீடியோவாக பதிவிட்ட யூ-டியூபர் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூ-டியூப் கேம் மதன். இவர் மீது சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் பொலிசில் பலர் புகார் அளித்துள்ளனர்.
அதில் பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்து உள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த கிரைம் பிரிவு பொலிசார் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவர் தற்போது தலைமறைவாக இருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
#MadanOP | பப்ஜி மதன் தர்மபுரியில் கைது.
— Ponmanaselvan S (@IamSellvah) June 18, 2021
உறவினர் வீட்டில் இருந்தபடி, முன் ஜாமீன் பெற முயற்சித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். @PTTVOnlineNews pic.twitter.com/QiFgh1z27K
இதையடுத்து, தனிப்படை பொலிசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் தருமபுரியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று மாலைக்குள் பப்ஜி மதன் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூடியூப் சேனல்கள் மூலம் பப்ஜி மதன் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி இருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதனின் யூடியூப் சேனலுக்கு 8 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். பப்ஜி மதன் கேர்ள் பேன், ரிச்சி கேமிங் ஆகிய யூடியூப் சேனல்களில் பெண்களுடன் மதன் நீண்ட நேரம் ஆபாசமாக உரையாடி இருக்கிறார். இதற்கான ஆதாரங்களையும் பொலிசார் திரட்டி உள்ளனர்.
ஏற்கனவே, இந்த வழக்கில் பப்ஜி மதனின் யூடியூப் பக்கத்தின் நிர்வாகியாக செயல்பட்ட அவரது மனைவி கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையில், பப்ஜி மதனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவிட்டுள்ளது.