சுவிஸில் தமிழ் எழுத்தாளர் விக்கி நவரட்ணம் எழுதிய நூல்களின் வெளியீடு

Switzerland
By Kirthiga May 17, 2023 11:30 AM GMT
Report

சுவிஸில் தமிழ் எழுத்தாளர் விக்கி நவரட்ணம் எழுதிய நூல்களின் வெளியீடு சிறப்புற நடைபெற்றது.

தமிழர்கள் சுவிஸுக்கு வந்து வாழ ஆரம்பித்து சுமார் 41 ஆண்டுகள் என்கிறது புள்ளிவிபரம்.

எழுந்தாளர் விக்கி நவரட்ணம் அவர்கள் 39 ஆண்டுகளாகச் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார். 

அவர் வாழும் Wallis மாநிலம் புகழ்வாய்ந்த அல்ப் மலைகளால் நிறைந்தது,Zermatt,matterhorn என்பன இத்தாலியை எல்லையாகக் கொண்டுள்ள சுவிஸ் மலைகளாகும்.

இந்த மாநிலத்துக்கு 1984 ம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து முதன் முதலாக வருகை தந்த முதல் தமிழ்மகன் விக்கி நவரட்ணம் அவர்கள்தான் என்கிறது பதிவுகள்.

மூன்று பெண்பிள்ளைகளின் தந்தையான விக்கி நவரட்ணம் 74 வயது நிரம்பிய புகழ்பூத்த எழுத்தாளர்.

சுவிஸில் தமிழ் எழுத்தாளர் விக்கி நவரட்ணம் எழுதிய நூல்களின் வெளியீடு | Publication Of Tamil Writer S Books In Switzerland

தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டு, அன்பு மனைவியுடன் மகிழ்சியாக வாழ்ந்துவரும் இவர் , படைத்த சிறுகதைகளும், கவிதைகளும் புலம்பெயர்தலைக்காதலைக், களத்துக்கும், புலத்துக்குமான இடைவெளியை, நல்லுறவுகளைப் பற்றியெல்லாம் நிறையப் பேசுகிறது. 

கடந்த நாற்பதாண்டுகால வாழ்வின் வலிகளும்,சுமைகளும்,கண்ணீரும்,துயரங்களும்,ஏன் சில மகிழ்ச்சிகளும் விக்கி நவரட்ணத்தின் படைப்புகளாகின்றன.

 வீரகேசரி,காற்றுவெளி,இனிய நந்தவனம் போன்ற பத்திரிகைகளில் அடிக்கடி இடம்பெறும் சிறுகதைகள், “வாசல் வந்த கங்கை “எனும் நூலாகவும்,கவிதைகள் “மனதுக்குள் உறங்கும் மெளனம் “எனும் நூலாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை Wallis மாநிலத்தில் Sion நகரில் வெளியிடப்பட்டது.

 விக்கி நவரட்ணம் ஏற்கனவே “ஆகாய கங்கை” “கண்களில் ஏன் அந்த கங்கை” எனும் இரண்டு நூல்களுடன் மொத்தம் நான்கு நூல்களைச் சுவிற்சர்லாந்திலிருந்து படைத்துத் தமிழுக்குத் தந்துள்ளார்.

பல நூற்றுக்கணக்கான மக்கள் சுவிஸின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்து நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

சுவிஸில் தமிழ் எழுத்தாளர் விக்கி நவரட்ணம் எழுதிய நூல்களின் வெளியீடு | Publication Of Tamil Writer S Books In Switzerland

சுவிற்சர்லாந்தில் முதன் முதலாக சிறுகதை நூலை வெளியிட்ட எழுந்தாளர் முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா(கலாநிதி கல்லாறு சதீஷ்) தலைமையில் நடைபெற்ற இந்த நூல்வெளியீட்டு விழாவில்,தமிழ் ஆசான் பூநகரியான் முருகவேள் பொன்னம்பலம்,ஒலிம்பிக் நகரான லவுசான் மாநகராட்சியின் உறுப்பினர் தம்பிப்பிள்ளை நமசிவாயம்,பட்டிமன்றப்பேச்சாளர் வித்தகன் சுரேஷ் செல்வரட்ணம்,எழுத்தாளர் சண் தவராசா,சுயாதீன ஊடகவியலாளர் அமரதாஸ்,எழுத்தாளர் பிறேமினி,எழுத்தாளர் ஜெயந்தி ஜீவா,தமிழ்க்குரு பாலகுமார் இரத்தினசபாபதி ஆகியோர் கருத்துக்களை வழங்கினர்.

 திரு.ரஜனிகாந்த் நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். கலாநிதி கல்லாறு சதீஷ் தனது தலைமையுரையில்; “வைகாசிமாதம் என்பது வலிமிகுந்த மாதம்,தமிழ் நூல்களை அதிகம் வெளியிடுவதற்கு மிகவும் உகந்த மாதம் இந்த மாதம்தான்,ஏனென்றால்,அன்று இழந்து போன அந்தத் தூண்களுக்கு நிராக நிற்கப்போவது இனி இந்த நூல்கள்தான்.

சங்க கால நூல்களும்,சங்கம் மருவிய கால நூல்களும்,காலக்கண்ணாடியாக இருப்பதுபோல் நவீன புலம்பெயர்தேசத்தின் காலக் கண்ணாடியாக இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தபோதும் விக்கி நவரட்ணம் அவர்களின் ஒரு வாசல் வந்த கங்கையும் இருக்கலாம். மேலும் அவர் தனதுரையில்; இன்று அன்னையர் தினம்,மாதம் வலி சுமந்த வைகாசி இரண்டு நினைவுகளாகவும்,இரண்டு நூல்களைப் படைத்துள்ளார்,கவிதை நூலைத் தனது தாய்க்கு அர்ப்பணம் செய்தவர்,சிறுகதைகளுக்கு வைத்த தலைப்புகளே கவிதைகளாக இருக்கின்றன,அவர்தம் சிறுகதைகளின் தலைப்புகளை எடுத்து அவருடைய தாயாருக்கு நானொரு கவிதை படைத்துள்ளேன் என்றவர் பின்வரும் தலைப்புகளால் உருவான கவிதையினை வாசித்தார்.

சுவிஸில் தமிழ் எழுத்தாளர் விக்கி நவரட்ணம் எழுதிய நூல்களின் வெளியீடு | Publication Of Tamil Writer S Books In Switzerland

 “அம்மாவின் ஞாபக வெளிகளில்-ஒரு

இளநதி நகர்கிறது.

இறக்கை இழந்த ஈசல் போல்

என்மனம் பறக்கிறது.

தூரத்திலிருந்தாலும்-தாயே

நெஞ்சோரத்தில் உன்நினைவு.

நினைவுகள் உருகிவரும் நெஞ்சிற்குள்

உதிரக்கண்ணீர்.

மெளனத்தில் புதைந்த கவிதைகளாக

மனதிற்குள் உறங்கும் உன் நினைவுகள்.

இந்த சோகங்களின் நதிமூலம் எது?

காத்திருந்த வைகறைக்குக்

கண்கொடுத்த பெரும் மேகமா?-

அல்லது திசை தவறிச் சென்ற இந்தச் சிறுமேகமா?

வாழ்வதற்கு வானமில்லாத வானவில்-நான்

நீயோ-மேகங்களுக்கிடையில் தூங்கும் நட்சத்திரம்.

நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையில்லை.

பாசத்தின் ஊற்றுக் கண் திறந்தது.

தூதுவிட்ட மனம் மழையில் நனைந்தது

இருள் விலகிய இதயங்களில் கண்ணீர்

கவலை என் கண்களில் கண்ணீரைத்

தெளித்தது

தாயே அதுவே இங்கே

என் வாசல் வந்த கங்கை."

என்று கவிதையை முடித்தார்.  நூல்வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் விக்கி நவரட்ணம் 1750.- சுவிஸ் பிராங்குகளை அறக்கொடையாக வழங்கினார்.

சுமார் ஆறு இலட்சம் இலங்கை ரூபாய்கள் பல்வேறு வழிகளில் தாயக உறவுகளுக்கு உதவும் விதத்தில் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் மேற்கு

22 Dec, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

21 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Regionalverband Saarbrucken, Germany

20 Dec, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கண்டி, சங்கானை, London, United Kingdom

20 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, ஸ்ருற்காற், Germany

21 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US