நள்ளிரவில் ஆடையின்றி கமெரா முன் நின்ற மகள்! ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கிய போனால் நடந்த விபரீதம்: எச்சரிக்கை செய்தி
புதுச்சேரியில் பட்டதாரி இளைஞர் ஒருவர், 200-க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி ஆபாசப் படம் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த பெற்றோர் 9-ஆம் வகுப்பு படிக்கும் தங்களுடைய 14 வயது மகளுக்கு ஆன்லைன் வகுப்பிற்காக ஆண்ட்ராய்டு போனை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அந்த சிறுமி எப்போதும் செல்போனிலே மூழ்கிபோயுள்ளார். தங்கள் மகள் இரவு பகலாக செல்போனும் கையுமாக இருந்ததால் ஆன்லைன் வகுப்பில் நன்றாக படிக்கிறாள் என்று நினைத்து பெற்றோர் சந்தோஷப்பட்டுள்ளனர்.
ஆனால், 4 மாதங்களுக்கு முன்பு ஒருநாள் நள்ளிரவில் கண் விழித்து எழுந்த தாய், பக்கத்து அறையில் செல்போன் முன்பு தனது மகள் ஆடையின்றி நிற்பதைக் கண்டு அவர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனல் உடனடியாக இது குறித்து சிறுமியிடம் கேட்ட போதும், பேஸ்புக்கில் ஒரு நபர் சிறுமியை மிரட்டி இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்த போது, சிறுமி பேஸ்புக்கை ஒரு பொழுது போக்கிற்காக பயன்படுத்தி வந்துள்ளார்.
அப்போது, சேலம் என்ற முகவரியில் அழகான போட்டோவுடன் இருந்த இளைஞருக்கு நட்பு அழைப்பும் விடுத்திருக்கிறார். அவரும் ஏற்றுக்கொள்ள இருவரும் சாதாரணமாக பேச ஆரம்பித்துள்ளனர்.
நாளடைவில் சிறுமியை காதலிப்பதாகக் கூறிய அந்த இளைஞர், அவருடன் பாலியல் ரீதியில் பேச ஆரம்பித்துள்ளான். சிறுமிக்கும் மேற்படி பேச்சுகள் பிடித்துவிடவே அவரும் தொடர்ந்திருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த இளைஞரின் வார்த்தையால் மூளைச்சலவை செய்யப்பட்ட அந்த சிறுமி அவர் சொல்வதை எல்லாம் கேட்க துவங்கியுள்ளார்.
அதன் விளைவாக, தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்ப, அந்த இளைஞரும், தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களையும் அனுப்பியுள்ளான். சிலமாதங்களாக இது தொடர்ந்த நிலையில், ஒரு நாள் அந்த இளைஞன் ஆபாசமாக வீடியோ கால் பேசும்படி சிறுமியை வற்புறுத்தியுள்ளான்.
ஆனால், அதற்கு சிறுமி மறுக்கவே, உடனே அவன், உனது வீடியோக்களை எல்லாம் இணையத்தில் விட்டுவிடுவேன் நான் சொல்வதை செய் என்று மிரட்டியுள்ளான். அதன் பின் வேறு வழியின்றி சிறுமியும் பெற்றோர்களுக்கு தெரியாமல் லைவ் சாட் , வீடியோ கால் என தொடர்ந்திருக்கிறார்.
இதனால் தான் நள்ளிரவு நேரத்திலும் ஆடையின்றி நின்றுள்ளார். இதை எல்லாம் அறிந்த பின் அந்த சிறுயின் பெற்றோர், இது போன்று வேறு யாரும் அவனிடம் மாட்டிவிடக் கூடாது என்பதற்காக உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து பொலிசார், அந்த பேஸ்புக் முகவரியை வைத்து இளைஞரை மடக்கி பிடித்துள்ளனர். ஆனால் அந்த இளைஞருக்கும், குறித்த சிறுமிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அது ஒரு பேக் ஐடி என்பது தெரியவர, அவர்களது பரிந்துரையின் பேரில் வழக்குப் பதிவு செய்த முத்தியால்பேட்டை காவல்துறையினர், சிறுமியை மிரட்டிய பேஸ்புக் முகவரியில் இருந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது அவருக்கும் சிறுமிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் சிறுமியுடன் பேசியவர் பேக் ஐடி என்பதும் தெரியவந்தது.
அதன் பின், சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணையில் சிறுமியிடன் வீடியோ கால் பேசிய இளைஞனின் எண்ணைப் பயன்படுத்தி விசாரித்த போது அந்த நபர் தஞ்சாவூரைச் சேர்ந்த எம்.ஏ.எம்.பில்., பி.எட் பட்டதாரியான கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது.
திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் திருப்பூர் சாயப் பட்டறை ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்த கமலகண்ணன் வீடியோ சாட்டிங் சேட்டையில் ஈடுபட்டுள்ளான்.
போலி பேஸ்புக் முகவரி மூலம் பல பெண்களை ஏமாற்றி, அவர்களுடன் பாலியல் ரீதியில் சாட் செய்து, காதலிப்பது போல நடித்து அவர்களிடம் இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்களை வாங்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
கமலக்கண்ணன் வைத்திருந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் பொலிசார் ஆய்வு செய்தபோது, அதில் அந்த சிறுமி மட்டுமல்லாமல் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் 500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதை பார்த்து பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.
அவரை கைது செய்த பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.