ரூ 10 டிஜிட்டல் கைது மோசடி: 5,436 வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்ட பணம்: சமூக ஊடக பிரபலம் கைது
புனேவில் ரூ 10 டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட சமூக ஊடக பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிஜிட்டல் கைது மோசடி
புனேவில் முதியவர் ஒருவரிடமிருந்து ரூ.10 கோடி வரை டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட சமூக ஊடக பிரபலம் ரோஹன் ஜாதவ் நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அரங்கேறிய இந்த மோசடியில், சம்பந்தப்பட்ட முதியவரிடம் CBI அதிகாரிகள் என கூறி மிரட்டியுள்ளனர். அத்துடன் அவர் மீதான பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.10.74 கோடியை மாற்றும் படி மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த முதியவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர், முதற்கட்டமாக மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏடிஎம் வாயிலாக எடுத்த பணத்தை ரோஹன் ஜாதவ் என்ற நபரிடம் வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.
5,436 வங்கிக் கணக்குகள்
சத்ரபதி சம்பா நகரை சேர்ந்த ரோஹன் ஜாதவ் திருடப்பட்ட ரூ. 10.74 கோடி ரூபாய் பணத்தை கிட்டத்தட்ட 5,436 வங்கிக் கணக்குகளுக்கு பிரித்து அனுப்பியது தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில் ஹாங்காங் உள்ள நபர்களுடன் டெலிகிராம் வழியாக தொடர்பு கொண்டு வெளிநாட்டு நபர்களுடன் கிரிப்டோகரன்சி மூலம் பணப்பரிமாற்றம் செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இருந்து பணத்தை வெளிநாடுகளுக்கு மாற்றி அதற்கு கமிஷன் பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ரோஹன் ஜாதவ் மீது புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வாட் ஆகிய இரண்டு பகுதிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் அவரது வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டது, நிதி ஆதாரங்களை தடுத்ததை அடுத்து ரோஹன் ஜாதவ் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி Whatsapp இல் இணையுங்கள். |