ஸ்பெஷல் கிளாஸ் என கூறி 10-ஆம் வகுப்பு மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! புரட்டி எடுத்த உறவினர்கள்
இந்திய மாநிலம் பஞ்சாபில் ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பாக்வாராவில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் விகாஸ் குமாரை பொலிஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருந்த விகாஸ் குமார், அதே பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை அடிக்கடி தனியே அழைத்து பேசி வந்துள்ளார்.
மேலும் பாடம் நடத்துவதை போல அந்த மாணவியின் அருகில் சென்று தொட்டு தொட்டு பாடம் நடத்துவது, புரிகிறதா என்று கேட்டு வந்துள்ளார்.
ஆனால் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொள்வதை அறியாத அந்த சிறுமி, விகாஸ் குமாரிடம் எப்போதும் போல பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார் விகாஸ் குமார். வகுப்புகள் முடிந்து அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு புறப்பட தயாரான போது, குறிப்பிட்ட அந்த மாணவியை தனியே அழைத்து சிறிது நேரம் காத்திரு. ஸ்பெஷல் கிளாஸ் ஒன்று உள்ளது, அதை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி காத்திருக்க வைத்துள்ளார்.
ஆசிரியரின் பேச்சை நம்பி அந்த மாணவியும் வகுப்பறையில் தனியாக காத்திருந்துள்ளார். மாணவர்களை அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற பின், வகுப்பில் தனியாக இருந்த மாணவியிடம் சென்ற விகாஸ் குமார், சிறிது நேரம் பாடம் நடத்துவது போல பாசாங்கு செய்துள்ளார்.
பின் ஒரு கட்டத்தில் பாடம் எடுப்பதை விட்டுவிட்டு தனது மொபைலை எடுத்து ஆபாச படங்களை பார்க்கும்படி மாணவியை கட்டாயப்படுத்தியுள்ளார்.
ஆனால் அதற்கு உடன்படாமல் ஆசிரியரை தள்ளிவிட்டு வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளார். ஆனால் மாணவியை இழுத்துப் பிடித்து உடலில் தொட கூடாத இடங்களை தொட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் விகாஸ் குமார்.
ஒருவழியாக அவரிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு ஓடிவந்த அந்த மாணவி, தன் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தனக்கு நடந்த கொடுமைகளைகே கூறி கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் உடனடியாக திரண்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த விகாஸ் குமாரை அடித்து வெளுத்து வாங்கியுள்ளனர். பின்னர் அவனது முகத்தில் பேனா மையை ஊற்றி திரும்பவும் அடித்து உதைத்தனர்.
அடித்து துவைத்த கையோடு அவனை பொலிஸிடம் அழைத்து சென்று ஒப்படைத்தனர். இதனை அடுத்து என்ன நடந்தது என்பதை விசாரித்த பொலிஸார், தகாத செயலில் ஈடுபட்ட விகாஸ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354-ஏ (பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.