பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த மற்றொரு யூடியூபர் கைது! வெளியான திடுக்கிடும் தகவல்
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஜஸ்பீர் சிங் என்ற மற்றொரு யூடியூபரை பொலிஸார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதி மல்ஹோத்ரா
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஹரியானவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற யூடியூபர், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் 15க்கும் அதிகமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யூடியூபர் ஜஸ்பீர் சிங் கைது
இந்த நிலையில், பஞ்சாப்பை சேர்ந்த யூடியூபர் ஜஸ்பீர் சிங் என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் 'ஜான் மஹால்' என்ற பெயரில் யூடியூப் சேனல் வைத்திருந்தார். இதனை மொத்தம் 1.1 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
உளவுத்துறை அளித்த தகவலின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஜஸ்பீர் சிங்கிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஷகீர் என்ற ஜட் ராந்தாவுடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் என்றும், பாகிஸ்தானின் முன்னாள் அதிகாரி எஹ்சான் உர் ரஹீம் உடனும் இவருக்கு தொடர்புள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டிற்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளது இரண்டு யூடியூபர் இவர் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |