புடின் இதுவரை எதையும் சாதிக்கவில்லை... தப்புக்கணக்கு போட்டுவிட்டார்: ஜேர்மன் சேன்ஸலர்
உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகளை அனுப்பியதன் மூலம் தப்புக்கணக்கு போட்டுவிட்டார் ரஷ்ய ஜனாதிபதி புடின் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.
புடின் ஒன்றும் சாதிக்கவில்லை
உக்ரைன் விடயத்தில் தப்புக்கணக்கு போட்டுவிட்ட புடின், இதுவரை அவர் நினைத்த எந்த இலக்கையும் அடையவில்லை என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்சலரான ஓலாஃப் ஷோல்ஸ்.
சேன்ஸலரின் நாடாளுமன்ற உரையில் கூறப்பட்ட விடயங்கள்
ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஷோல்ஸ், சில நாட்களில் உக்ரைனைத் தோற்கடித்துவிடலாம் என புடின் போட்ட கணக்கு தப்பாகிவிட்டது என்றார்.
குழாய் மூலம் அனுப்பப்பட்ட எரிவாயுவை நிறுத்துவதன்மூலம் ஐரோப்பாவின் ஒற்றுமையை சீர்குலைத்துவிடலாம் என புடின் நம்பினார் என்று கூறிய ஷோல்ஸ், உக்ரைனியர்களின் நம்பிக்கையைக் குறித்த அவரது எண்ணம், ஐரோப்பாவைப் பற்றிய அவருடைய எண்ணம், நம்மைக் குறித்த எண்ணம், நமது குடியரசுகளின் குணம் மற்றும் வலிமை மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நமது சுயவிருப்பத்தைக் குறித்த அவரது எண்ணம் என அவரது எண்ணம் அனைத்துமே தவறு என்றார்.
உக்ரைனுக்கு உதவி செய்வது தொடர்பில் சமீபத்தில் ஹங்கேரி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்நாட்டையும் லேசாக குத்திக்காட்டும் வகையில், ஐரோப்பாவின் மதிப்பை குறைத்து எடைபோடலாம் என எண்ணும் யாரென்றாலும், தோற்றுப்போவார்கள் என்றார் ஷோல்ஸ்.