இணையத்தில் ட்ரெண்டாகும் கூமாபட்டிக்கு படையெடுக்கும் இணையவாசிகள் - பொதுப்பணித்துறை விடுத்த எச்சரிக்கை
கூமாபட்டி இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், அது தொடர்பாக பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூமாபட்டி கிராமம்
சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே கூமாப்பட்டி என்ற வார்த்தை ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் dark_night_tn84 என்ற கணக்கில் கூமாபட்டி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், கூமாப்பட்டி கிராமத்தின் அருமை பெருமைகளை குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.
அதில், கூமாபட்டிக்கு வாங்க, கூமாபட்டி தனி தீவு, கூமாபட்டி தண்ணீர் சர்பத் மாதிரி இருக்கும், மூலிகை தண்ணீர் இது என அவர் பேசிய வீடியோக்களே #Koompatti என ட்ரெண்ட்டிற்கு காரணமாகும்.
அந்த வீடியோவில் உள்ள பச்சை பசேலான விவசாய நிலங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றை பார்த்த இணையவாசிகள், உண்மையிலே தமிழ்நாட்டில் கூமாப்பட்டி என தீவு உள்ளதா என அதை காணும் ஆர்வத்துடன், Vloggers கூமாப்பட்டி நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
பொதுப்பணித்துறை எச்சரிக்கை
கூமாப்பட்டி என்பது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பிளவக்கல் அணை அருகே கூமாப்பட்டி அமைந்துள்ளது.
ஆனால், வீடியோவில் கட்டப்படுவது போல், அங்குள்ள நீர்நிலைகளில் தற்போது நீர்வரத்து இல்லை, அது பழைய வீடியோ என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிளவக்கல் அணையில் குளிக்கவோ மீன்பிடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஏமாற வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |