இன்னும் சில தினங்களில்... கத்தாரின் எச்சரிக்கையால் உச்சம் தொட்ட எண்ணெய் விலை
வளைகுடாவில் உள்ள அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியாளர்களும் சில நாட்களுக்குள் உற்பத்தியை நிறுத்த நேரிடும் என கத்தார் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பணவீக்கம்
கத்தார் எரிசக்தி அமைச்சர் எச்சரித்ததைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாதமிக உயர்ந்த நிலைக்கு உச்சம் கண்டுள்ளது.

மத்திய கிழக்கில் இஸ்ரேலால் ஏற்படுள்ள இந்த மோதல் உலகப் பொருளாதாரங்களையே வீழ்ச்சியடையச் செய்யலாம் என்று அமைச்சர் சாத் அல்-காபி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு 93 டொலரைத் தாண்டியது - இது 2023 இலையுதிர்காலத்திற்குப் பிறகு மிக உயர்ந்த நிலையாகும்.
அதிகரிக்கும் எண்ணெய் விலைகள் நமது வாகனங்களில் எரிபொருள் நிரப்புவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதில் மட்டுமல்லாமல், சில உணவு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலையிலும் அதிக அளவிலான விளைவுகளை ஏற்படுத்தும்.
எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகமாக இருந்தால், அது பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற முக்கிய உலகப் பொருளாதாரங்களில் பணவீக்கத்தைத் தூண்டக்கூடும் என்ற எச்சரிக்கைகளும் வெளியாகியுள்ளது.
ஈரானுக்கு எதிரான போர் வரும் வாரங்களில் தொடர்ந்தால் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 150 டொலரை எட்டக்கூடும் என்று அமைச்சர் காபி கூறியுள்ளார்.
மேலும், இந்தப் போர் சில வாரங்களுக்குத் தொடர்ந்தால், உலகம் முழுவதும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே பிரித்தானியாவில் உள்ள நுகர்வோர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை பார்த்து வருகின்றனர். தற்போதைய நெருக்கடி ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பைப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சங்களும் எழுந்துள்ளன, ஆனால் இதுவரை எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளில் ஏற்பட்ட உயர்வு 2022 இல் அனுபவித்த உச்சங்களை விடக் குறைவாகவே உள்ளது.

அடுத்த சில நாட்களில்
எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் முக்கிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக கத்தார் உள்ளது. இந்த நிலையில், இந்த வாரம் தங்களது ஆலைகள் மீதான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து எல்என்ஜி உற்பத்தியை நிறுத்தியதாக QatarEnergy கூறியது.
மேலும், முடிவில்லாமல் போர் நீடிக்கும் என்றால், அடுத்த சில நாட்களில் மற்ற அனைத்து எரிசக்தி ஏற்றுமதியாளர்களும் இதைப் பின்பற்ற வேண்டியிருக்கும் என்று தான் நம்புவதாக அமைச்சர் காபி கூறியுள்ளார்.
QatarEnergy நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்படும் அமைச்சர் காபி, போர் தற்போது நின்றாலும், இயல்பான உற்பத்தியை மீண்டும் தொடங்க வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகும் என்றார்.

உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வழக்கமாக ஒவ்வொரு நாளும் ஹார்முஸ் நீரிணை வழியாக அனுப்பப்படுகிறது. ஆனால் கடந்த வார இறுதியில் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து ஹார்முஸ் வழியாக போக்குவரத்து கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நீரிணையை மூடுவது உலகளவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை அதிகப்படுத்தக்கூடும், மேலும் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலகின் சில மிகப்பெரிய பொருளாதாரங்கள் பாதிக்கப்படலாம் என்றே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |