தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு!! பிரித்தானியாவின் மிக முக்கிய அறிவிப்பு
தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்குத் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளிலிருந்து பிரித்தானியா விலக்கு அளிக்கவுள்ளது.
ஜூலை 19-ம் தேதி முதல் பிரிட்டனில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படவுள்ளன.
அங்கு, மூன்றாம் முறையாக விதிக்கப்பட்ட ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாக பிரிட்டன் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்று மிதமாக உள்ள நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு (தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் போட்டிருக்க வேண்டும்) தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.