மனைவியுடன் சண்டை., பனை மர உச்சியில் வாழ தொடங்கிய கணவன்..
மனைவியுடனான சண்டை சச்சரவுகளால் சோர்வடைந்த நபர் ஒருவர் பனை மரத்தில் வாழத் தொடங்கியுள்ளார்.
இந்தியாவின் வடமாநிலமான உத்தரபிரதேசத்தில் ஒரு வினோத சம்பவம் பதிவாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக, உத்தர பிரதேசத்தில் மாவு மாவட்டத்தின் பசரத்பூர் கிராமத்தில் ராம் பிரவேஷ் எனும் நபர் தனது கிராமத்தில் 100 அடி உயரமுள்ள ஒரு பனை மரத்தின் மேல் அமர்ந்து காணப்பட்டார்.
அந்த தனது மனைவியுடன் தொடர்ச்சியான வாக்குவாதங்களால் சோர்வாக இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி தன்னைத் தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபோல் தொடர்ந்து குடும்பத் தகராறில் விரக்தியடைந்த அவர், உயரமான மரத்தில் வாழத் தொடங்கினார், இரவில் மலம் கழிப்பதற்காக மட்டுமே கீழே இறங்குவதாக கூறப்படுகிறது.
அவர் உயிருடன் இருக்க, அவருக்கு ஒரு வசதியான அமைப்பு உள்ளது. மரத்துடன் கட்டப்பட்டுள்ள இழுக்கக்கூடிய கயிற்றின் மூலம் அவரது குடும்பத்தினர் உணவு மற்றும் தண்ணீரை அவருக்கு அனுப்புகிறார்கள்.
ராம்பிரவேஷ் பெரும்பாலாம் மரத்தின் உச்சியில் அமர்ந்திருப்பதைக் காணலாம். இரவில் சிறிது நேரம் இறங்கி வந்து மலம் கழித்துவிட்டுத் திரும்புவார். யாராவது அவரை கீழே இறங்கும்படி வற்புறுத்த முயன்றால், அவர் அவர்களை செங்கல் மற்றும் கற்களால் தாக்குகிறார் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
ராம் பிரவேஷ் பனை மரத்தில் தனக்கு அமைதி கிடைப்பதாக நம்பலாம், ஆனால் உள்ளூர்வாசிகள் அவரது செயல் குறித்து மகிழ்ச்சியடையவில்லை.
பனை மரத்தை ஒட்டி பல வீடுகள் உள்ளதாகக் கூறி, அவர் அங்கு வாழ்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்கள் தங்கள் வீடுகளில் என்ன செய்கிறார்கள் என்பதை அவர் தொடர்ந்து கவனித்து வருகிறார், அது அவர்களின் தனியுரிமையைப் பாதிக்கிறது. இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து புகார் அளித்தனர்.
"இதுபற்றி நாங்கள் பொலிஸாருக்கு தெரிவித்தோம் ஆனால் அவர்கள் வந்து, வீடியோ எடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர்” என்று கிராமத் தலைவர் தீபக் குமார் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதிகாரப்பூர்வமாக யாரும் புகார் அளிக்காததால், ராம் பிரவேஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பொலிஸார் கூறுகின்றனர்.