பிரித்தானிய ராணியாரின் தனிப்பட்ட மொபைல்போன்: இருவருக்கு மட்டுமே அதில் பதிலளிப்பாராம்
அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மொபைல்போன் ஒன்றை பயன்படுத்தும் பிரித்தானிய ராணியார், அதிலிருந்து இருவருடன் மட்டுமே பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய ராணியார் தமது தனிப்பட்ட மொபைல்போனில் இருந்து தமது மகள் இளவரசி ஆன் மற்றும் பந்தய மேலாளர் ஜான் வாரன் ஆகியோருடன் மட்டுமே பேசுவார் என தெரியவந்துள்ளது.
உலகின் எந்த மூலையில் இருந்தும் இவர்களால் ராணியாரை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் MI6 அமைப்பின் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட Samsung மொபைல்போனையே ராணியார் பயன்படுத்தி வருகிறார்.
இதனால் உலகில் எவராலும் ராணியாரின் தனிப்பட்ட மொபைல்போனை ஊடுர முடியாது என தெரிவிக்கின்றனர். மேலும், ஜான் வாரன் எப்போது அந்த மொபைல்போனில் அழைத்தாலும் ராணியார் பதிலளிப்பார் என்றே கூறப்படுகிறது.
குதிரைகள் மற்றும் பந்தயங்கள் தொடர்பில் சர்வதேச புகழ்பெற்றவர் ஜான் வாரன். மட்டுமின்றி ராணியாரின் நெருங்கிய நண்பரின் மருமகன் இந்த ஜான் வாரன்.
மட்டுமின்றி, தமது 19வது வயதில் இருந்தே ராணியார் Royal Ascot-ல் பங்கேற்று வருகிறார். தமது பிள்ளைகள் அனைவருடனும் தனிப்பட்ட பாசப்பிணைப்பினை கொண்டிருந்தாலும், மகள் ஆன் உடன் பிரிக்க முடியாத ஒரு பந்தத்தை ராணியார் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
அதனாலையே, அவருக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறார். மட்டுமின்றி, ராணியாருக்கும் அவரது மகளுக்கும் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு குதிரை சவாரி தான். இதுவும் அவர்களை பிரிக்க முடியாமல் பிணைத்திருக்கலாம் என்கிறார்கள் பிரித்தானிய அரச குடும்ப ஆய்வாளர்கள்.