தன் இறுதிச்சடங்கு இப்படி இருக்கக்கூடாது என்று முன்பே விருப்பத்தை தெரிவித்த ராணி எலிசபெத்!
தனது இறுதிச்சடங்கு எப்போதும்போல 'சலிப்பான' ஒன்றாக இருக்கக்கூடாது என்று மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் இறப்பதற்கு முன்பே கூறியுள்ளார்.
ராணியின் இறுதிச்சடங்கு எப்படி நடக்கும் என்பது குறித்து முன்னாள் இங்கிலாந்து தலைமை பேராயர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள யார்க் நகரத்தின் முன்னாள் பேராயர் Lord Sentamu, மறைந்த ராணி 'நீண்ட, சலிப்பான' இறுதிச் சடங்குகளை விரும்பவில்லை என்று தெரிவித்தார்.Sentamu 2005 முதல் 2020 வரை இங்கிலாந்தின் தலைமை பேராயராகவும் தனியுரிமை மன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
ராணியின் இறுதிச்சடங்கு குறித்து பிபிசியிடம் கூறிய Sentamu, "நீண்ட, சலிப்பான சேவைகளை ராணி விரும்பவில்லை" என்று கூறினார். மேலும், இப்போது நடக்கவிருக்கும் இறுதிச் சடங்கு 1662-ஆம் ஆண்டு Book of Common Prayer புத்தகத்தில் இருப்பது போலவே இருக்கும் என்று வெளிப்படுத்தினார்.
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு 19-09-2022 Live
இறுதிச் சடங்கின் திட்டங்களை ஆழமாக வெளிப்படுத்திய முன்னாள் பேராயர், பிரித்தானிய அரச குடும்பத்திற்கு உரித்தான பாதிரியார்கள் மற்றும் தேவாலய பாடகர்களுடன் (Chapels Royal), அபேயின் பாடகர் குழுவின் பாடல்களை இறுதிச்சடங்கு சேவையில் இடம்பெறும் என கூறினார்.
இதனிடையே, பிரித்தானியாவின் இராணுவத் தலைவர்கள் இறுதிச் சடங்கை ராணிக்கான 'கடைசி கடமையாக' கருதுகின்றனர்.
10,000-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், விமானிகள் மற்றும் மாலுமிகள் சேவையின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று அட்மிரல் ராடாகின் தெரிவித்தார்.
Getty Images
பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்ட தகவலின்படி, செப்டம்பர் 19, திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11:55 மணிக்கு பிரித்தானியா இரண்டு நிமிட மௌனத்தை அனுசரிக்கும். வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை முதல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே மற்றும் குறைந்தது 2,000 விருந்தினர்கள் இந்த சேவையில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணியின் சவப்பெட்டி வெலிங்டன் ஆர்ச்சில் இருந்து அடக்கம் செய்யப்படும் வின்ட்ஸருக்கு அரசு சவ ஊர்தியின் மூலம் கொண்டு செல்லப்படும்.