இக்கட்டான சூழலிலிருந்து பிரித்தானிய மகாராணியாரை காப்பாற்றிய முன்னாள் பிரதமர்: வெளியான சுவாரஸ்ய சம்பவம்
இளவரசி டயானாவின் மரணம் உலகை உலுக்கிய நேரத்தில், அப்போது பிரித்தானிய பிரதமராக இருந்த டோனி பிளேர் தன்னை ஒரு இக்கட்டான சூழலிலிருந்து காப்பாற்றியதாக பிரித்தானிய மகாராணியார் உணர்ந்ததாக ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக ராஜ குடும்பத்தினர் தங்கள் உணர்வுகளை பொதுமக்கள் முன் வெளிப்படுத்த மாட்டார்களாம். அப்படி வெளிப்படுத்தக்கூடாது என்பது ராஜ குடும்ப மரபாக இருந்ததாம்.
அப்படி இருக்கும் நிலையில், 1997ஆம் ஆண்டு, மக்களின் இளவரசி என்று அழைக்கப்பட்ட இளவரசி டயானா விபத்து ஒன்றில் கொல்லப்பட்டபோது, மக்கள் கடுமையாக அதிர்ச்சியடைந்தனர்.
தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருந்தாலும், டயானா பொது வாழ்க்கையில் மக்களின் அன்பையும் பரிதாபத்தையும் சம்பாதித்து வைத்திருந்தார்.
அப்படியிருக்கும்போது அவர் திடீரென மரணமடைய, மக்களை அது கடுமையாக அதிர்ச்சியடையவைத்துள்ளது.
அப்போது, ராஜ குடும்ப மரபுப்படி எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், கருத்து எதுவும் சொல்லாமல், வாய் மூடி அமைதியாக இருந்தாராம் பிரித்தானிய மகாராணியார்.
ஆனால், மகாராணியார் அப்படி இருப்பது மக்களுக்கு பிடிக்காது என்று கூறி அவரை மவுனம் கலைக்க வைத்தது அப்போதைய பிரதமரான டோனி பிளேர்தானாம்.
டோனி பிளேரின் ஆலோசனையின்படிதான், மகாராணியார் லண்டன் திரும்பி மக்களை திருப்திப்படுத்தும் வகையில், பொதுமக்கள் முன்னிலையில் டயானாவுக்கு அஞ்சலி செலுத்தினாராம்.
தான் மக்களுடைய மன நிலையை சரியாக புரிந்துகொள்ளாமல் இருந்தபோது, டோனி பிளேர்தான் அந்த சூழ்நிலையிலிருந்து தன்னைக் காப்பாற்றியதாக மகாராணியார் உணர்ந்தார் என Dominic Sandbrook என்ற வரலாற்றாளர் தெரிவித்துள்ளார்.