ஒரே கேள்வியில் உலகத்தலைவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்கவைத்த பிரித்தானிய மகாராணியார்: பகை மறந்து மகிழ்ந்திருந்த தலைவர்கள்
சிலருக்கு எத்தகைய சூழலையும் இனிமையாக்கிவிடக்கூடிய ஒரு திறமை இருக்கும். அது தனக்கு இப்போதும் இருக்கிறது என்பதை நிரூபித்தார் பிரித்தானிய மகாராணியார்.
G7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்நாடுகளின் தலைவர்கள் பிரித்தானியா வந்துள்ளனர். அவர்கள் ஒரு புகைப்படத்துக்காக போஸ் கொடுப்பதற்காக அமர்ந்தார்கள்.
அனைவரும் போஸ் கொடுத்து தயாராக இருக்க, சரியாக புகைப்படக்கலைஞர் புகைப்படம் எடுக்கப்போகும்போது தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன், குறும்பாக, நாம் மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக்கொண்டு போஸ் கொடுக்கவேண்டுமா? (’Are you supposed to look as if you're enjoying yourself?') என ஒரு கேள்வியை எழுப்பினார் மகாராணியார். உடனே, புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பதையே மறந்து அனைவரும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
மகாராணியாருக்கு அருகில் உட்கார்ந்திருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும், ஆமாம், பார்ப்பதற்கு சீரியஸாக தெரிந்தாலும், நாங்கள் எல்லாம் என்ஜாய் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறோம் என்று கூற, அதை ஆமோதிப்பதுபோல மீண்டும் சிரித்தார்கள் அனைவரும். பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் உரசல் இருந்துகொண்டே இருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரித்தானியாவுக்கு ஆதரவாக பேசாமல், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவாக பேசியதால் பிரித்தானியர்களுக்கு கோபம். இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிரச்சினை இருந்தாலும், பகை மறந்து அனைவரும் சிரித்து மகிழ்ந்த காட்சிகளை புகைப்படங்களில் காணமுடிகிறது.
உண்மையிலேயும் அனைவரும் இப்படியே தங்களுக்குள்ளான பிரச்சினைகளை மறந்து ஒன்றிணைந்து வாழ்ந்தால், உலகமே சுபிட்சமாகும் என்ற எண்ணம் இந்த தலைவர்களைப் பார்க்கும்போது உருவாவதை தவிர்க்க முடியவில்லை!