இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கின் போது மகாராணி தனியாக அமர வேண்டியிருக்குமாம்! வெளியான தகவல்
இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கின் போது கொரோனா விதிமுறைகள் காரணமாக மகாராணி தனியாகவே அமர வேண்டியிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் கொரோனா விதிமுறைகள் சில தளர்த்தப்பட்டாலும், மக்கள் கூடும் இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது.
குறிப்பாக திருமணம், இறுதிச்சடங்கின் போது, குறிப்பிட்ட சில நபர்களே அனுமதிக்கப்படுவர். அது மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் பொருந்தும் என்பதால், இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கின் போது, அவர் தனியாக அமர வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
பிலிப் இறுதிச்சடங்கிற்கு மகாராணி மற்றும் 30 பேர் அனுமதிக்கப்படுவர். இதில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, அவர்கள் முகக்கவசத்தை அணிய வேண்டும்.
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இந்த இறுதிச்சடங்கில், மகாராணியார் தனியார் அமரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிலிப்பின் இறுதிச் சடங்கு தான், இந்த ஆண்டில் தொலைக்காட்சி அதிக பார்வையாளர்களை கொண்ட ஒன்றாக இருக்க கூடும் என்று கருதப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக மக்களுக்கு அனுமதி இல்லை என்பதால், இது நடக்கக்கூடும். இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 4-ஆம் திகதி பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா விதிமுறைகள் குறித்து ஆற்றிய உரையே அதிக பார்வையாளர்களை கொண்டிருந்தது.
அதை 25.1 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். அதே போன்று ஹாரி மற்றும் மேகன் நேர்காணல் ஒளிபரப்பப்பட்ட போது, 13.9 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.
மேலும், பிலிப்பின் இறுதிச் சடங்கிற்கான ஒளிபரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் அதே சமயம் பிபிசி மற்றும் ஐடிவி ஆகியவை இதை ஒளிபரப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.