தாத்தாவின் இறுதிச்சடங்கின்போது இளவரசர் ஹரி வில்லியம் ஒன்றுசேர முடியாது: மகாராணியாரின் உத்தரவு
பிரிந்த சகோதரர்கள் ஹரியும் வில்லியமும் தாத்தாவின் இறுதிச்சடங்கிலாவது ஒன்றுசேருவார்களா என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாளை இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ள நிலையில், அவரது உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்குப்பின்னால் நடந்து செல்ல இருக்கும் ஹரியும் மேகனும் அருகருகே நடந்து செல்லமாட்டார்கள் என தெரியவந்துள்ளது.
சிறுவயது முதல் தாங்கள் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் அண்ணனும் தம்பியும் அருகருகே நின்ற புகைப்படங்கள் பல இணையத்தில் கொட்டிக்கிடக்கும் நிலையில், முதன்முறையாக இம்முறை இருவரும் பிரிந்து நிற்கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
தாத்தாவின் உடலுக்கு பின்னால் அவர்கல் செல்லும்போது, அவர்கள் இருவருக்கும் நடுவே இளவரசர் பீற்றர் பிலிப்ஸ் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. யார் இந்த பீற்றர் பிலிப்ஸ் என்ற கேள்வி எழுகிறதல்லவா? இளவரசி ஆனுடைய மகன்தான் இந்த பீற்றர் பிலிப்ஸ்!
மேகன் ராஜ குடும்பத்துக்குள் வந்தபின் தொடர்ந்து நடந்த குழப்பங்கள், இன்று அதிகம் அறிமுகமில்லாதவர்களை முன்னிலைப்படுத்தும் அளவுக்கு உறவுகளைப் பிரித்துவிட்டது.
ஒரு பக்கம் அண்ணனும் தம்பியும் இணைய இருந்த ஒரே வாய்ப்பும் பறிபோனதால் மக்கள் கவலையடைய, சிலரோ தங்களை தனித்தனியாக பிரித்துவைக்கும்படி இளவரசர்களே கேட்டுக்கொண்டார்களோ என சந்தேகம் எழுப்பியுள்ளார்கள்.
ஆனால், பக்கிங்காம் அரண்மனை செய்தித்தொடர்பாளர், இது ஒரு இறுதிச்சடங்கு, அதில் நாமாக எதையும் கற்பனை செய்துகொள்ளக்கூடாது, இவை அனைத்துமே மகாராணியாரின் விருப்பம், அவரது சம்மதத்தின்பேரில்தான் எல்லாம் நடக்கின்றன என்று கூறி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.