பிரித்தானியா மகாராணிக்கு என்ன ஆனது? சற்று முன் பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம்
பிரித்தானியா மகாராணி வடக்கு அயர்லாந்தின் பயணத்தை ஒத்தி வைத்த நிலையில், அவர் மருத்துவமனையில் ஒரு இரவை கழித்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்(95) சமீபத்தில் வடக்கு அயர்லாந்துக்கான பயணத்தை திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இறுதியில் அவரது பயணம் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது.
மகாராணி சில நாட்கள் வின்ட்சர் கோட்டையில் ஓய்வெடுக்கவுள்ளதாக கூறப்பட்டது.
அதன் பின் மகாராணி குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு அயர்லாந்திற்கான பயணத்தை ரத்து செய்த பின்னர் ராணி மருத்துவமனையில் ஒரு இரவை கழித்தார் என்று குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து செய்தி தொடர்பாளர் கூறுகையில், மகாராணியார் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவ ஆலோசனையை தொடர்ந்து, கடந்த புதன் கிழமை பிற்பகல் வழக்கமான சோதனைகளுக்காக, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவனையில் இருந்தார் எனவும், இன்று மதியம் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வின்ஸ்டர் கோட்டைக்கு திரும்பிவிட்டதாக கூறினார்.
மகாராணியார் தற்போது நல்ல மனநிலையில் இருப்பதையும் அவர் உறுதி செய்தார்.
மேலும், கடந்த சில நாட்களாகவே மகாராணியார் பரபரப்பாகவே காணப்பட்டார்.
குறிப்பாக விண்ஸ்டர் கோட்டையில் ஒரு பெரிய உலக முதலீட்டு உச்சிமாநாட்டை நடத்தியது, அதன் பின் செனட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.