இளவரசர் ஹரியின் மனைவி மேகனை மகாராணியார் மன்னிக்கவே கூடாது: மக்கள் கருத்து
கணவர் இறந்த துக்கத்திலிருந்து மகாராணியார் மெதுவாக மீண்டு வரும் நிலையில், மேகன் ராஜ குடும்பத்தை மன்னிக்கத் தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், மக்கள் வேறு மாதிரி நினைக்கிறார்கள்!
பிரபல பிரித்தானிய பத்திரிகை ஒன்று நடத்திய ஆய்வு ஒன்றில், ராஜ குடும்பத்தினர் வேறுபாடுகளை மறந்து உறவுகளை தொடரவேண்டுமா என மக்களிடம் கேட்கப்பட்டபோது, மக்களோ, தான் ஓபரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டிக்காக, மேகன்தான் மன்னிப்புக்கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 94 சதவிகிதத்தினரும் மேகனை ராஜ குடும்பத்தில் மீண்டும் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்கிற மாதிரியே கருத்துத் தெரிவித்துள்ளார்கள். வெறும் 5 சதவிகிதத்தினர் மட்டுமே கருத்துவேறுபாடுகளை மறந்து ராஜகுடும்பத்தினர் முன்போல் உறவுகளைத் தொடரவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் மேகன், ராஜ குடும்பத்தினர் மன்னிப்புக்கேட்டால் தான் மன்னிக்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளது மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. மன்னிப்புக் கேட்கவேண்டியது மேகன்தான் என்று கூறியுள்ள மக்கள், அத்துடன் மேகனை மன்னிக்கவேண்டுமா அல்லது மன்னிக்கக்கூடாதா என்பதை மகாராணியார் மட்டுமே முடிவு செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளனர் மக்கள்.
மேகன் முதலில் தன் சொந்தக் குடும்பத்துடன், குறிப்பாக தன் தந்தையுடன் முதலில்
சமாதானமாகட்டும் என்று கூறியுள்ளார்கள் சிலர்.