பிரித்தானியா மகாராணியை நேரில் சந்தித்து பேசினார் பிரதமர் போரிஸ் ஜோன்சன்! என்ன காரணம்? வெளியான வீடியோ
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன், சற்று முன் மகாராண் இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து பேசினார்.
கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் திகதி பிரதமர் போரிஸ் ஜோன்சன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தை நேரில் சந்தித்து பேசினார்.
அதன் பின் தற்போது 15 மாதங்களுக்கு பின்னர், அவர் மகாராணியைப் பார்ப்பதற்காக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்றார். மகாராணி அவரை வரவேற்றார். இந்த சந்திப்பு எதைப் பற்றியது என்பது குறித்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
#COVID19: Prime Minister Boris Johnson tells the Queen that Health Secretary Matt Hancock is 'full of beans'.
— Sky News (@SkyNews) June 23, 2021
It is the first time in over a year that the two have met in person.
Read more here: https://t.co/tkTg35DFRm pic.twitter.com/Fs37TZbPJ4
அதே சமயம், பிரித்தானியாவின் அரசாங்க விஷயங்களைப் பற்றிய முக்கியமான சந்திப்பாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாத துவக்கத்தில், Cornwall-ல் உலக தலைவர்கள் கலந்து கொண்ட G7 உச்சி மாநாட்டிற்கு பின் இருவரின் சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் போது, மகாராணி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவியை தன்னுடைய அரண்மனைக்கு வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.