இளவரசர் பிலிப்பின் சவப்பெட்டி மேல் மகாராணி தன் கைப்பட எழுதி வைத்திருந்த அட்டை! கசிந்த புகைப்படம்
இளவரசர் பிலிப்பின் இறுதிச்சட்ங்கு நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரின் சவப்பெட்டியின் மேல், மகாராணி தன்னுடைய கைப்பட அட்டையில் ஏதோ ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
பிரித்தானியா மகாராணியின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக் கிழமை மறைந்தார்.
இதையடுத்து அவரது நல்லடக்கம் நேற்று மாலை, செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இளவரசர் பிலிப்பிற்கான இறுதிச்சடங்கின் போது, மகாராணியார் தனியாக அமர்ந்திருந்தார்.
கொரோனா விதிமுறைகள் படி மகாராணி உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். 73 ஆண்டுகால திருமண வாழ்க்கையில், கணவர் பிலிப் இப்போது இல்லாததால், அவருக்கு இறுதி விடை கொடுக்கும் வகையில், மகாராணியார் தனது கைப்பட எழுதி கொடுத்த அட்டை ஒன்று அவரின் சவப்பெட்டி மேல் இருந்தது.
அந்த அட்டைகளுக்கு மத்தியில், வெள்ளை அல்லி பூக்கள், சிறிய வெள்ளை ரோஜா பூக்கள் மற்றும் ஒரு அழகான மாலை இருந்தது.
இறுதிச்சடங்கு நிகழ்வின் புகைப்படங்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், அந்த அட்டையில், அதிகாரப்பூர்வ அரச முத்திரை இருந்துள்ளது.
அதுமட்டுமின்றி அதில் மகாராணி இதைத் தான் எழுதியிருக்கார், அதைத் தான் எழுதியிருக்கார் என்று பல ஊடங்களில் கூறப்பட்டு வருகிறது.
ஆனால், அது உறுதியாக தெரியவில்லை. அந்த அட்டையில் இருக்கும் வார்த்தைகளை வைத்து இந்த தகவல் வெளி வருகிறது.
இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனையும், எந்த ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.